இராணி மங்கம்மாள் கொலு மண்டபம்

இராணி மங்கம்மாள் கொலு மண்டபம் (Rani Mangammal Audience Hall) கிபி 1700ல் நாயக்க அரசியான இராணி மங்கம்மாளினால் திருச்சியில் கட்டப்பட்டது. இது மங்கம்மாளின் கணவரான சொக்கநாத நாயக்கரால் 1666ல் கட்டப்பட்ட அரண்மனையின் ஒரு பகுதியாக உள்ளது. இது திருச்சி மலைக்கோட்டைக்கு அண்மையில் உள்ளது. 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகளில் இது நகர மண்டப நிர்வாகத்தினர் கூடுவதற்கான மண்டபமாகச் செயற்பட்டது.[1] 1999 ஆம் ஆண்டில் இது இந்திய அருங்காட்சியகத் துறையால் கையகப்படுத்தப்பட்டது.[2] இங்கே தற்போது அருங்காட்சியகம் ஒன்று அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

  1. Testimony to Rich Past
  2. Jeyaraj, V., Directory of Monuments in Tamilnadu, Director of Museum, Government of Tamilnadu, Chennai, 2005, p.159

படங்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.