இமயமலை பழுப்புக் கரடி

இமயமலை பழுப்புக் கரடி (Himalayan Brown Bear) என்பது ஒரு கரடி இனமாகும். இது பழுப்புக் கரடியின் கிளையினம் ஆகும். இந்த கரடிதான் தொன்மங்களில் கூறப்பட்ட எட்டி (மனிதன்) என்று கருதப்படுகிறது.[1][2]

இமயமலை பழுப்புக் கரடி
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டிகள்
வரிசை: ஊனுண்ணி
குடும்பம்: கரடி
பேரினம்: Ursus
இனம்: U. arctos
துணையினம்: U. a. isabellinus
மூவுறுப்புப் பெயர்
Ursus arctos isabellinus
Horsfield, 1826

விளக்கம்

இமாலயப் பழுப்பு கரடிகளின் உடல் பருமன் பாலினரீதியாக ஏற்றத்தாழ்வு கொண்டது. ஆண் கரடிகள் 1.5மீ இருந்து 2.2மீட்டர் (4 அடி 11 அங்குலம் - 7 அடி 3 அங்குலம்) நீளம் கொண்டவை. பெண் கரடிகள் 1.37மீ இல் இருந்து 1.83 மீட்டர் (4 அடி 6 அங்குலம் - 6 அடி) வரை இருக்கும். இவைதான் இமய மலையில் வாழக்கூடிய பெரிய விலங்குகள் ஆகும்.

பரவல்

இந்த கரடிகள் நேபாளம், திபெத், வட இந்தியா, வடக்கு பாக்கித்தான் போன்ற இடங்களில் காணப்படுகின்றன. இவை ஏற்கனவே பூட்டானில் இருந்து அழிந்துவிட்டது எனக் கருதப்படுகிறது.

நடத்தை மற்றும் சூழலியல்

இவை கரடிகள் அக்டோபர் காலகட்டத்தை ஒட்டி பனிக்கால உறக்கம் மேற்கொள்கினறன ஏப்ரல், மே மாதங்களில் வெளிப்படுகின்றன. அதுவரை பொதுவாக இந்த கரடிகள் குகைகளில் உறக்கத்தை மேற்கொள்கின்றன.

உணவு

இமாலயப் பழுப்பு கரடிகள் அனைத்துண்ணி ஆகும். இவை புற்கள், வேர்கள், தாவரங்கள், பூச்சிகளையும், சிறிய பாலூட்டிகள்,பழங்கள் போன்றவற்றை விரும்பி உண்கின்றன. சில சமயம் ஆடுகளையும் வேட்டையாடுகின்றன. வயதுவந்த கரடிகள் சூரிய உதயத்திற்கு முன் அல்லது பிற்பகலின் போது சாப்பிடுகின்றன.

மேற்கோள்கள்

  1. The Japan Times, 18 September 2003.
  2. BBC News — Yeti's 'non-existence' hard to bear
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.