இ. இரத்தினசபாபதி

இ. இரத்தினசபாபதி (1938 - டிசம்பர் 12, 2006), 1988 ஆம் ஆண்டு வரையில் ஈழத்தில் செயற்பட்ட ஈழப்போராட்ட இயக்கமான ஈரோஸ் என்ற ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் அமைப்பை நிறுவியவர்.

1938 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் இணுவில் கிராமத்தில் பிறந்த இளையதம்பி இரத்தினசபாபதி பத்திரிகைத்துறையிலும், இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். நீண்ட காலமாக லண்டனில் வாழ்ந்து வந்த போதும் மார்க்சிய சிந்தனையிலும், இலங்கைத் தமிழர்களின் அரசியலிலும், உலக அரசியல் போராட்டங்களிலும் தீவிர நாட்டம் கொண்டவராக விளங்கினார்.

1976 ஆம் ஆண்டளவில் ஈரோஸ் அமைப்பை லண்டனில் நிறுவிய இவர், பாலஸ்தீன விடுதலை இயக்கம் - ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் போன்ற விடுதலை அமைப்புகளுடனான உறவுகளை பேணி வந்தார்.

1989 ஆம் ஆண்டு சிறிலங்கா நாடாளுமன்றத்திற்கான தேர்தலின்போது ஈழவர் ஐனநாயக முன்னணி சார்பில் தெரிவானார். ஆனால் இவர் சார்ந்த ஈழவர் ஐனநாயக முன்னணி நாடாளுமன்ற நடவடிக்கைகளில் சிறிது காலம் பங்கேற்றபின் விலகிக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இரட்னா என்றழைக்கப்படும் .இரத்தினசபாபதி லண்டனில் உள்ள மருத்துவமனையொன்றில் செவ்வாய்க்கிழமை டிசம்பர் 12, 2006 காலையில் காலமானார்.

இரத்தினசபாபதி ஆற்றிய உரை

இலங்கைப் பாராளுமன்றத்தில், ஈழவர் ஜனநாயக முன்னணி உறுப்பினர்களின் பிரவேசத்தின் பின் 21.07.89 அன்று சபையில் ஈரோஸ் நிலைப்பாடு பற்றி இரத்தினசபாபதி ஆற்றிய உரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் அவரின் நிலைப்பாடுகள் வெளிப்படுத்தப்படுகின்றன. அந்த உரையை பின்வரும் சுட்டியில் காணலாம்.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.