ஆல்பர்ட் லுத்துலி
ஆல்பர்ட் ஜான் லுத்துலி (Albert John Lutuli) அல்லது சுலு மொழியில் முவும்பி (Mvumbi, 1898 - 21 சூலை 1967) தென்னாப்பிரிக்காவின் அரசியல்வாதி ஆவார். ஆசிரியராகப் பணியாற்றிய இவர் தென்னாப்பிரிக்காவின் வெள்ளியின சிறுபான்மை அரசு ஆட்சிக் காலத்தில் ஆப்பிரிக்கத் தேசியக் காங்கிரசின் தலைவராக இருந்தவர். தென்னாப்பிரிக்காவின் இனவொதுக்கல் கொள்கைக்கு எதிராக அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்தமைக்காக இவருக்கு 1960 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவரே ஐரோப்பா அல்லது அமெரிக்காவுக்கு வெளியே இருந்து முதன்முதலாக அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் ஆவார்.[1]
ஆல்பர்ட் லுத்துலி Albert Luthuli | |
---|---|
ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர் | |
பதவியில் 1952–1967 | |
முன்னவர் | ஜேம்சு மொரோக்கா |
பின்வந்தவர் | ஒலிவர் தம்போ |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | அண். 1898 புலவாயோ, தெற்கு ரொடீசியா |
இறப்பு | 21 சூலை 1967 குவாசூலு-நத்தால், தென்னாப்பிரிக்கா |
அரசியல் கட்சி | ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் |
வாழ்க்கை துணைவர்(கள்) | நொக்குகானியா பெங்கு |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.