ஆலங்குடி சோமு

ஆலங்குடி சோமு (12 திசம்பர் 1932 - 6 சூன் 1990) தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும், தயாரிப்பாளரும் ஆவார்.[1] இந்தியாவின் தமிழக அரசினால் வழங்கப்படும் கலைமாமணி விருது 1973 - 1974 பெற்றுள்ளார்.

தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த ஆலங்குடியைச் சேர்ந்தவர் .1960 முதல் 1985 வரை திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார். [1960 இல் வெளிவந்த யானைப்பாகன் திரைப்படத்திற்காக "ஆம்பளைக்கு பொம்பள அவசியந்தான்" என்பது இவர் எழுதிய முதற்பாடல்.

தமிழக அரசியலில் ஒலிக்கும் பல்லவி

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை[2]

சில பிரபல பாடல்கள்

  • ஆண்டவன் உலகத்தின் முதலாளி... (தொழிலாளி)
  • பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள்...
  • தாயில்லாமல் நானில்லை தானே எவரும் பிறந்ததில்லை... (அடிமைப் பெண்)
  • வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒன்று... (பத்தாம்பசலி)
  • ஒரு கொடியில் (காஞ்சித்தலைவன்)
  • பொட்டிருந்தும் பூவிருந்தும் (பூம்புகார்)
  • கத்தியை தீட்டாதே (விளக்கேற்றியவள்)
  • மலருக்கு தென்றல் (எங்க வீட்டுப் பிள்ளை)
  • என்னடி செல்லகண்ணு (தேன்மழை)
  • மேகங்கள் திரண்டுவந்தால் (நான் ஆணையிட்டால்)
  • வெள்ளி நிலா வானத்திலே (காதல் படுத்தும் பாடு)
  • ஆடலுடன் பாடலைக்கேட்டு (குடியிருந்த கோயில்)
  • என்னம்மா ராணி (குமரிக்கோட்டம்)

இரவும் பகலும், கார்த்திகை தீபம் ஆகிய படங்களைன் பாடல்கள் அனைத்தையும் இவரே எழுதியுள்ளார்.

==தயாரித்த படங்கள்--

  • பத்தாம் பசலி
  • வரவேற்பு

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.