ஆலங்குடி சோமு
ஆலங்குடி சோமு (12 திசம்பர் 1932 - 6 சூன் 1990) தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும், தயாரிப்பாளரும் ஆவார்.[1] இந்தியாவின் தமிழக அரசினால் வழங்கப்படும் கலைமாமணி விருது 1973 - 1974 பெற்றுள்ளார்.
தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த ஆலங்குடியைச் சேர்ந்தவர் .1960 முதல் 1985 வரை திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார். [1960 இல் வெளிவந்த யானைப்பாகன் திரைப்படத்திற்காக "ஆம்பளைக்கு பொம்பள அவசியந்தான்" என்பது இவர் எழுதிய முதற்பாடல்.
தமிழக அரசியலில் ஒலிக்கும் பல்லவி
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை[2]
சில பிரபல பாடல்கள்
- ஆண்டவன் உலகத்தின் முதலாளி... (தொழிலாளி)
- பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள்...
- தாயில்லாமல் நானில்லை தானே எவரும் பிறந்ததில்லை... (அடிமைப் பெண்)
- வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒன்று... (பத்தாம்பசலி)
- ஒரு கொடியில் (காஞ்சித்தலைவன்)
- பொட்டிருந்தும் பூவிருந்தும் (பூம்புகார்)
- கத்தியை தீட்டாதே (விளக்கேற்றியவள்)
- மலருக்கு தென்றல் (எங்க வீட்டுப் பிள்ளை)
- என்னடி செல்லகண்ணு (தேன்மழை)
- மேகங்கள் திரண்டுவந்தால் (நான் ஆணையிட்டால்)
- வெள்ளி நிலா வானத்திலே (காதல் படுத்தும் பாடு)
- ஆடலுடன் பாடலைக்கேட்டு (குடியிருந்த கோயில்)
- என்னம்மா ராணி (குமரிக்கோட்டம்)
இரவும் பகலும், கார்த்திகை தீபம் ஆகிய படங்களைன் பாடல்கள் அனைத்தையும் இவரே எழுதியுள்ளார்.
==தயாரித்த படங்கள்--
- பத்தாம் பசலி
- வரவேற்பு
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
- [http://www.yarl.com/forum3/index.php?showtopic=134005 என்னை விட்டால் யாரும் இல்லை
- ஆயிரம் கைகள் மறைத்துநின்றாலும் – கவிஞர் முத்துக்கூத்தன்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.