ஆறுமுகம் கனகரத்தினம்

ஆறுமுகம் கனகரத்தினம் (Arumugam Canagaratnam (1873 - ) இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும், இலங்கை சட்டவாக்கப் பேரவை உறுப்பினரும் ஆவார்

ஆ. கனகரத்தினம்
A. Canagaratnam
இலங்கை சட்டவாக்கப் பேரவையின்
வட மாகாணத்தின் தெற்குத் தொகுதியின் உறுப்பினர்
தனிநபர் தகவல்
பிறப்பு 1873
பெற்றோர் விசுவநாதன் ஆறுமுகம்
படித்த கல்வி நிறுவனங்கள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி
உவெசுலி கல்லூரி
தொழில் வழக்கறிஞர்
இனம் இலங்கைத் தமிழர்

வாழ்க்கைச் சுருக்கம்

கனகரத்தினம் யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த விசுவநாதன் ஆறுமுகம் என்பவருக்கு 1873 ஆம் ஆண்டில் பிறந்தார்.[1] இவர் வழக்கறிஞர் ஏ. கதிரவேலு, மருத்துவர் ஏ. பொன்னம்பலம் ஆகியோருடன் பிறந்தவர்.[2] யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, மற்றும் கொழும்பு உவெசுலி கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றார்.[1] கல்கத்தாவில் உயர் கல்வி கற்றார்.[1],

இலங்கை அரசின் அமைச்சராக இருந்த கதிரவேலு சிற்றம்பலம் கனகரத்தினத்தின் மருமகன் ஆவார்.[3]

பணி

உயர் கல்வியை முடித்துக் கொண்ட கனகரத்தினம் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.[1] 1920களில் கிராமியக் கல்வி அபிவிருத்தி வாரியத்தின் தலைவராகப் பணியாற்றினார்.[1] அத்துடன் யாழ்ப்பாண மாநகரசபைத் தலைவராகவும் இருந்தார்.[1][3] 1924 சட்டவாக்கப் பேரவைத் தேர்தலில் வட மாகாணத் தெற்குத் தொகுதியில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.[1][4]

சமூகப் பணி

இலங்கைப் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்கு இவர் முன்னின்று உழைத்தார். த சிலோன் பேட்ரியட் என்ற ஆங்கிலத் தேசிய வாரப் பத்திரிகை ஒன்றை நடத்தினார்.[1] தனது சொந்த செலவில் யாழ்ப்பாணத்தில் ஸ்டான்லி கல்லூரி என்ற பெயரில் உயர்தரப் பாடசாலை ஒன்றை நிறுவினார். இப்பாடசாலைக்கு அதன் நிறுவனரின் நினைவாக கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் எனப் பின்னர் பெயரிடப்பட்டது.[1][3] இவரது நினைவாக யாழ்ப்பாணத்தின் சாலை ஒன்று கனகரத்தினம் வீதி என்ற பெயருடன் விளங்குகிறது.[1]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.