ஆர்தர் ராம்போ

ஜான் நிக்கோலாஸ் ஆர்தர் ராம்போ (Jean Nicolas Arthur Rimbaud - 20 அக்டோபர் 1854 – 10 நவம்பர் 1891) என்னும் முழுப்பெயர் கொண்ட ஆர்தர் ராம்போ சார்லேவில் (Charleville) என்னும் இடத்தில் பிறந்த ஒரு பிரெஞ்சுக் கவிஞரும், அரசின்மைவாதியும் ஆவார். நவீன இலக்கியம், இசை, ஓவியம் என்பவற்றில் இவரது செல்வாக்கு நீண்டகாலம் நிலைத்திருந்தது. மிக இளம் வயதிலேயே அவரது மிகப் புகழ் பெற்ற ஆக்கங்களை இவர் எழுதினார். இவரை ஒரு "குழந்தை ஷேக்ஸ்பியர்" என விக்டர் ஹியூகோ புகழ்ந்துள்ளார். ஆனால் இருபத்தொரு வயதாகு முன்பே ஆக்க எழுத்துக்களை நிறுத்திவிட்டார். எனினும் தனது வாழ்க்கைக்காலம் முழுதும் ஒரு சிறந்த கடித எழுத்தாளராக விளங்கினார். இவர் ஓய்வொழிவின்றி மூன்று கண்டங்களில் விரிவாகப் பயணம் செய்தார். 37 வயது நிறைந்து ஒரு மாதமாகு முன்னரே புற்றுநோய் காரணமாக இவர் காலமானார்.

ஆர்தர் ராம்போ
17 வயதாக இருந்தபோது வரையப்பட்ட ஆர்தரின் உருவப் படம் c.1872
பிறப்பு20 அக்டோபர் 1854
இறப்பு10 நவம்பர் 1891 (அகவை 37)
மர்சேய்
கையெழுத்து

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.