அம்பலவாண தேசிகர்

அம்பலவாண தேசிகர் என்பவர் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சார்ந்த சைவ சமய நூலாசிரியர் ஆவார். அதிசய மாலை, உபதேச வெண்பா, சன்மார்க்க சித்தியார், சித்தாந்த சிகாமணி, சித்தாந்தப் பஃறொடை, தசகாரியம் முதலிய பத்து சைவ சாத்திர நூல்களை இயற்றியுள்ளார். மேலும் அனுபோக வெண்பா, பாஷண்ட நிராகரணம், பூப்பிள்ளை யட்டவணை போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.[1]

காண்க

சைவ சமய இலக்கியம்

ஆதாரம்

  1. http://www.tamilvu.org/courses/degree/a041/a0414/html/a041431.htm#313
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.