திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம்
திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம் (மலையாளம்: തിരുവനന്തപുരം അന്താരാഷ്ട്ര വിമാനത്താവളം) இந்தியாவின் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. இது கேரளாவின் முதல் வானூர்தி நிலையமாகும்; மேலும் இது இந்தியாவில் மாநகர நகர் சாராத முதல் பன்னாட்டு வானூர்தி நிலையமாக இருக்கிறது. இது பன்னாட்டு பயணிகள் போக்குவரத்தில் நாட்டில் 8 வது பரபரப்பான வானூர்தி நிலையமாகவும் மற்றும் ஒட்டுமொத்த பயணிகள் போக்குவரத்தில் 10 பரபரப்பான வானூர்தி நிலையமாகவும் உள்ளது.
திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்திநிலையம் തിരുവനന്തപുരം അന്താരാഷ്ട്ര വിമാനത്താവളം | |||
---|---|---|---|
| |||
IATA: TRV – ICAO: VOTV | |||
சுருக்கமான விபரம் | |||
வானூர்திநிலைய வகை | பொது | ||
இயக்குனர் | இந்திய வானூர்தி நிலைய கட்டுப்பாட்டு அமைப்பு | ||
அமைவிடம் | திருவனந்தபுரம் | ||
உயரம் AMSL | 13 அடி / 4 மீ | ||
ஆள்கூறுகள் | 08°28′56″N 76°55′12″E | ||
ஓடுபாதைகள் | |||
திசை | நீளம் | மேற்பரப்பு | |
மீ | அடி | ||
14/32 | 3,398 | 11,148 | Asphalt |
ஆண்டுதோறும், பங்குனி உத்தரம் அன்று "அராத்" ஊர்வலம் பத்மநாபசாமி கோயில் வரை செல்லும்பொழுது, இந்த வானூர்தி நிலையத்தின் ஓடுபாதை வழியாக தொடர்ந்து ஐந்து மணி நேரங்களாக வானூர்தி நிலையமே மூடியிருக்கும்.[1]
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.