எசு. எசு. தென்னரசு

எசு.எசு. தென்னரசு (S. S. Thennarasu) தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது (1990 - 1991) பெற்ற எழுத்தாளர் ஆவார். இவர் எழுதிய நூற்களை தமிழ்நாடு அரசு 2007 - 08 இல் நாட்டுடைமை ஆக்கியுள்ளது. [1] இவர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

படைப்புகள்

  1. அவள் ஒரு கர்நாடகம்
  2. கண்மணி (புதினம்); 1956; அருணோதயம், சென்னை. [3]
  3. சந்தனமழை (நாடகம்); 1956; அருணோதயம், சென்னை.[3]
  4. செம்மாதுளை
  5. தங்கச்சி மடம்
  6. தேவாலயம் (நாடகம்); 1956; அருணோதயம், சென்னை.[3]
  7. பாடகி
  8. பெண்ணில்லாத ஊரிலே
  9. மலடி பெற்ற பிள்ளை
  10. மிஸஸ்.இராதா
  11. மயிலாடும்பாறை (புதினம்) [4]

சான்றாவணங்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.