ஹல்தர் நாக்
ஹல்தர் நாக் (Haldhar Nag, பிறப்பு: 31 மார்ச் 1950) என்ற இந்தியக் கவிஞர், கோசலி மொழியில் கவிதைகளை எழுதியுள்ளார். இவர் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதைப் பெற்றுள்ளார். இவருக்கு லோக் கவி ரத்னா என்ற சிறப்புப் பட்டமும் உண்டு. இவர் ஒடிசாவின் பர்கட் மாவட்டத்தில் பிறந்தவர்.[2] இவர் கோசலி மொழியில் நாட்டுப் புறக் கதைகளையும் எழுதியுள்ளார்[2]
ஹல்தர் நாக் | |
---|---|
தொழில் | கவிஞர் |
நாடு | இந்தியர் |
குறிப்பிடத்தக்க விருது(கள்) |
பத்மசிறீ[1] |
துணைவர்(கள்) | மாலதி நாக் |
பிள்ளைகள் | 1 மகள் |
வாழ்க்கைக் குறிப்பு
ஹல்தர் நாக் இந்தியாவின் ஒரிசா மாநில பர்கட் மாவட்டத்தில் கேன்ஸ் (Ghens) எனும் பழங்குடியின[3] வகுப்பில் பிறந்தவர். மூன்றாம் வகுப்பு படிக்கும் போது தந்தை இறந்த காரணத்தினால், படிப்பை நிறுத்தி விட்டார். பதினாறு ஆண்டுகள் ஒரு பள்ளிக்கூடத்தில் சமையல்காரர் வேலை செய்து கொண்டே காப்பியங்களையும், கவிதைகளையும் எழுதத் தொடங்கினார். தற்போது பள்ளி மாணவர்களுக்கான சிறு எழுதுபொருள் கடை நடத்தி வருகிறார்.
ஒரிசா மாநிலத்தில் பழங்குடியின மக்களின் மொழியான கோசலி மொழியில் (Kosli language) தோடோ பர்காச் (மூத்த ஆலமரம்) என்னும் இவரது முதல் கவிதை நூல் 1990-ஆம் ஆண்டில் வெளியானது. பின்னர் இயற்கை, சமூகம், மதம், புராணங்கள் ஆகியவற்றைக் கருப்பொருளாகக் கொண்டு இருபதுக்கும் மேற்பட்ட காப்பியங்களையும், கவிதைகளையும் இயற்றினார். அறுபத்து ஆறு வயதான ஹால்தர் நாக்கின் இலக்கியப் பணியை பாராட்டி இந்தியக் குடியரசுத் தலைவர் 28 மார்ச்சு 2016 அன்று பத்மசிறீ விருது வழங்கினார். [4]
எழுதியவை
சிறப்புகள்
சான்றுகள்
- PrameyaNews7. "Odisha’s Nila Madhab Panda and Kosli poet Haldhar Nag chosen for Padma Shri Award". Prameya News7. பார்த்த நாள் 25 January 2016.
- Sudeep Kumar Guru (25 September 2010). "Poetry makes him known as new Gangadhar Meher". தி டெலிகிராஃப் (Ananda Publishers). http://www.telegraphindia.com/1100925/jsp/orissa/story_12978196.jsp. பார்த்த நாள்: 4 November 2010.
- List of notified Scheduled Tribe
- Meet Odisha’s Haldar Nag: A Class 3 Dropout And A Dishwasher, Just Bagged Padma Shri For His Poetry
- The Man who won the award for his poetry: Haldar Nag