ஷாமினி ஸ்ரோரர்

ஷாமினி ஸ்ரோரர் (இயற்பெயர்: ஷாமினி ஜெயசிங்கம்) இலங்கை வானொலி நாடகங்களில் நடித்தவர். தற்போது அவுஸ்திரேலியாவில் சிட்னியில் வசிக்கிறார். அங்கும் மேடை நாடகங்களில் நடித்து வருகிறார். தணியாத தாகம் வானொலி தொடர் நாடகத்தில், முக்கிய பாத்திரம் ஒன்றில் நடித்தவர். இலங்கை ரூபவாகினியில் ஒளிபரப்பான முதலாவது தொலைக்காட்சி நாடகமான 'கற்பனைகள் கலைவதில்லை' என்ற நாடகத்தை எழுதிய மருத்துவக் கலாநிதி ஜெ. ஜெயமோகன் இவரது உடன்பிறந்தவர் ஆவார்.


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.