வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி கோயில் நகரமான மதுரையில் 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு தனியார் பொறியியல் கல்லூரி ஆகும். தென் மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் இக்கல்லூரி மதுரையில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரி வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் கீழ் செயல்படுகிறது. இக்கல்லூரியில் ஆறு இளநிலை படிப்புகளும் ஏழு முதுநிலை படிப்புகளும் உள்ளன. அவை-
- குடிசார் பொறியியல்
- கணினிப் பொறியியல்
- மின்பொறியியல்
- தொடர்புப் பொறியியல்
- தகவல் தொழில்நுட்பம்
- இயந்திரவியல்
வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி | |
---|---|
![]() | |
நிறுவல்: | 2007 |
வகை: | சுயநிதிக் கல்லூரி |
அவைத்தலைவர்: | திரு. எம்.வி. முத்துராமலிங்கம் |
முதல்வர்: | முனைவர் என். சுரேஷ் குமார் |
பீடங்கள்: | ~250 |
மாணவர்கள்: | ~2800 |
இளநிலை மாணவர்: | ~2400 |
முதுநிலை மாணவர்: | ~400 |
அமைவிடம்: | மதுரை, தமிழ் நாடு, இந்தியா
(9°53′36.9″N 78°10′35.6″E) |
வளாகம்: | ~14 ஏக்கர்கள் |
விளையாட்டில் சுருக்கப் பெயர்: | VCET |
சார்பு: | அண்ணா பல்கலைக்கழகம் |
இணையத்தளம்: | www.vcet.ac.in |
இக்கல்லூரி மதுரையில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் விரகனூர் சுற்றுச்சாலை அருகில் அமைந்துள்ளது.
சான்றுகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.