வெய்யில்
வெய்யில் (இயற்பெயர்: வெயில்முத்து) தமிழ் நவீனக் கவிஞர். தமிழ் சிற்றிதழ்களிலும் வெகுசன இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருபவர். ‘கொம்பு’ எனும் சிற்றிதழின் ஆசிரியராகவும் பதிப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். 1984 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் நாள் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தார். பெற்றோர்: பெருமாள் - தமிழ்செல்வி. மனைவி: பிரியா, மகள்: மாயா. தற்போது ‘ஆனந்த விகடன்’ குழும இதழில் பணிபுரிந்து வருகிறார்.

வெய்யில்,கவிஞர்,சென்னை
கவிதைத்தன்மை
நாட்டார் வாழ்வியல், சங்க இலக்கிய அழகியல், நவீன வாழ்வின் நெருக்கடி நிலை, கீழ்த்தட்டு மக்களின் அரசியல் என கலவையான பண்பில் இயங்கக்கூடியவை இவரது கவிதைகள்.
படைப்புகள்
- புவன இசை (மு.2009) அனன்யா பதிப்பகம்
- குற்றத்தின் நறுமணம் (மு.2011) - புதுஎழுத்து பதிப்பகம்.
- கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் .ஃப்ராய்ட் (டிச.2016) - மணல்வீடு பதிப்பகம்.
- மகிழ்ச்சியான பன்றிக்குட்டி (டிச.2017) - கொம்பு பதிப்பகம்.
- அக்காளின் எலும்புகள் (டிச.2018) - கொம்பு பதிப்பகம்
விருது
- இளம் கவிஞருக்கான களம்புதிது விருது (குற்றத்தின் நறுமணம்) (2015)
- சிறந்த சிற்றிதழுக்கான (கொம்பு) விகடன் விருது (2016)
- சிறந்த கவிதைத் தொகுப்பிற்கான விகடன் விருது (கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் .ஃப்ராய்ட்) (2017)
- சிறந்த கவிதைத் தொகுப்பிற்கான உயிர்மை (கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் .ஃப்ராய்ட்) - சுஜாதா அறக்கட்டளை விருது (2017)
- சிறந்த கவிதைத் தொகுப்பிற்கான தமிழ்நூல் வெளியீடு மற்றும் விற்பனை மேம்பாட்டுக் குழும விருது (மகிழ்ச்சியான பன்றிக்குட்டி) (2018)
- எஸ்.ஆர்.வி பள்ளியின் 2018ம் ஆண்டிற்கான ‘படைப்பூக்க’ விருது (2018)
- சிறந்த கவிதைத் தொகுப்புக்கான (மகிழ்ச்சியான பன்றிக்குட்டி) தமுஎகச விருது (2018)
- 2019ம் ஆண்டிற்கான சிறந்த கவிதை தொகுப்பிற்கான ஆதம்நாம் விருது "அக்காளின் எலும்புகள்"
வெளியிணைப்பு
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.