வீர கணபதி
வீர கணபதி, விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 4வது திருவுருவம் ஆகும்.
19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் வீர கணபதியின் உருவப்படம்.
திருவுருவ அமைப்பு
சிவந்த திருமேனியையும், சிறிது சினந்த திருமுகத்தையும் உடையவர். வேதாளம், வேல், அம்பு, வில், சக்கரம், கத்தி, கேடகம், சம்மட்டி, கதை, அங்குசம், நாகம், பாசம், சூலம், குந்தாலி, மழு, கொடி ஆகிய பதினாறையும் பதினாறு திருக்கரங்களிலும் கொண்டவர்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.