விவேகம் (வேதாந்தம்)
விவேகம் எனில் பரம்பொருள் ஒன்றே என்ற உண்மையானது அறிந்து கொள்வதுடன் நம் கண்களால் பார்க்கும் இவ்வுலகம், அனுபவிக்கும் பொருட்கள் அனைத்தும் தற்காலிக தோற்றம் கொண்டதேயன்றி என்றும் நிலையற்றது (மித்யா/பொய்) என்று உணரும் அறிவுதான் விவேகம் ஆகும். சாத்திரங்கள் விதித்துள்ள கர்மங்களையும், வழிபாட்டுமுறைகளையும் மேற்கொண்டு, மனத்தை தூய்மை செய்து கொள்ள வேண்டும். மனத்தூய்மை அடைந்த பிறகு விவேகம், வைராக்கியம், மனவடக்கம், புலனடக்கம், பொறுமை, அகிம்சை, சமாதானம், மனநிறைவு, தியாகம் முமுச்சுத்துவம் எனும் பிரம்மத்தை அறியும் ஆவல் போன்ற வழிமுறைகளை பின்பற்றவேண்டும்.
உசாத்துணை
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.