வியட்நாமிய நீர்ப்பாவைக் கூத்து

நீர்ப்பாவைக் கூத்து (Water puppetry) (வியட்நாமியம்: மூவா உரோய் நுவோசு (Múa rối nước), பொருள்: "நீர்ப்பாவை நடனம்")என்பது வட வியட்நாமில் உள்ள சிவப்பு ஆற்றுப் படுகையில் பதினொறாம் நூற்றாண்டில் ஊரகத்தே தோன்றிய மரபான கலை வடிவமாகும். இன்றைய வியட்நாமிய பாவைக்கூத்து ஆசிய பாவைக்கூத்தின் தனித்த்தொரு வடிவமாகத் திகழ்கிறது.

கனாயில் உள்ள தாவோ இலாங் பாவைக் கூத்தரங்கில் நீர்ப்பாவை ஆட்டம்

பாவைகள் மரத்தால் செய்து அரக்கால் பூசப்படுகின்றன. காட்சிகள் இடுப்பளவு நீரில் நிகழ்த்தப்படுகின்றன. மூங்கில்கழி பாவையை நீரில் தாங்குகிறது. இதை பாவைக் கூத்தாளர்கள் திரை மறைவில் இருந்து ஆட்டுவர். எனவே பாவைகள் நீரின்மேல் நகர்வது போலத் தோன்றும். நெல்வயல் வெள்லத்தில் மூழ்கும்போது ஊர்மக்கள் இப்பாவைக் கூத்தை ஆடுவர்.

பாவை ஆட்டம்

மரபான இசை, பாட்டோடு பல்லியக் கருவி இசையும் அமைகிறது
நீர்த்தேவதைகளின் நடனம்
கனாயில் உள்ல நீர்ப்பாவையரங்குக் காட்சி, வியட்நாம்.

உள்ளடக்கம்


காட்சியகம்

மேற்கோள்கள்

    இலக்கியம்

    • Nguyễn, Huy Hồng (2006). Vietnamese Traditional Water Puppetry. Hanoi: Thế Giới Publishers. பக். 79.

    வெளி இணைப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.