விக்கிரம சிங்கையாரியன்
விக்கிரம சிங்கையாரியன் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தைச் சேர்ந்த ஒரு அரசனாவான். இவ் வம்சத்தின் நான்காவது அரசனான இவன் கி.பி 1279 ஆம் ஆண்டிலிருந்து 1302 ஆம் ஆண்டு வரையான 23 ஆண்டுகள் யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்டதாக செ. இராசநாயகம் கணிப்பிட்டுள்ளார்.
விக்கிரம சிங்கையாரியன் Vickrama Cinkaiariyan | |||||
---|---|---|---|---|---|
யாழ்ப்பாண அரசன் | |||||
ஆட்சி | 1292-1302 | ||||
முன்னிருந்தவர் | குலோத்துங்க சிங்கையாரியன் | ||||
பின்வந்தவர் | வரோதய சிங்கையாரியன் | ||||
| |||||
தமிழ் | விக்கிரம சிங்கையாரியன் | ||||
மரபு | ஆரியச் சக்கரவர்த்திகள் | ||||
தந்தை | குலோத்துங்க சிங்கையாரியன் |
இவன் காலம் உள்நாட்டுக் குழப்பங்கள் மிகுந்த காலமாக இருந்தது. அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த புத்த சமயத்தவரான சிங்களவருக்கும், இந்துத் தமிழருக்கும் கலகம் மூண்டது. இரண்டு தமிழர் சிங்களவரால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சிங்களவர் தலைவனுக்கும் வேறு 17 பேருக்கும் விக்கிரம சிங்கையாரியன் மரண தண்டனை விதித்ததாகவும் மேலும் பலரைச் சிறையில் அடைத்ததாகவும் யாழ்ப்பாண வைபவமாலை மூலம் அறியக் கிடைக்கின்றது. இதனால் பெருமளவு சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தை விட்டு நீங்கினர். எனினும் விக்கிரம சிங்கையாரியன் இறக்கும் வரை அவனுக்குச் சிங்களவர்களால் தொல்லைகள் இருந்தே வந்தன.
விக்கிரம சிங்கையாரியனைத் தொடர்ந்து அவனது மகன், வரோதய சிங்கையாரியன் யாழ்ப்பாண அரசனாக முடி சூட்டிக் கொண்டான்.
வெளியிணைப்புக்கள்
- யாழ்ப்பாண வைபவமாலை நூலகம் இணையத் தளத்திலிருந்து.