வி. கே. கோகாக்
விநாயக கிருஷ்ண கோகாக் (ஆங்கிலம்: Vinayaka Krishna Gokak) (பிறப்பு:1909 - இறப்பு:1992) என்பவர் ஒரு கன்னட இலக்கியப் படைப்பாளி ஆவார். இவர் கன்டத்தில் எழுதி 1982-ல் வெளிவந்த 'பாரத சிந்து ராஷ்மி' என்ற காவியத்துக்காக 1990இல் ஞானபீட விருது பெற்றவராவார்.[1] இவர் கன்னடம், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நூல்களை எழுதியுள்ளார். சத்ய சாய் பாபாவின் தீவிர பக்தர்.
வி. கே. கோகாக் | |
---|---|
தொழில் | பேராசிரியர், எழுத்தாளர் |
நாடு | இந்தியா |
இலக்கிய வகை | கதை |
இயக்கம் | நவோதையா |
தாக்கங்கள்
| |
பின்பற்றுவோர்
| |
கையொப்பம் | ![]() |
கல்வி
இவர் தார்வார் கர்நாடக கல்லூரியில் இலக்கியத்தில் இளங்கலை, முதுகலைப் பட்டம் பெற்றார். இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்று முதல் வகுப்பில் தேறினார். 1938இல் நாடு திரும்பியதும், சாங்லி விலிங்டன் கல்லூரி முதல்வராகப் பணியாற்றினார்.
காவியம்
- பாரத சிந்து ராஷ்மி
புதினங்கள்
- சமரசவ ஜீவனா பகுதி1
- சமரசவ ஜீவனா பகுதி2
கவிதைத் தொகுப்பு
- உர்னானப்பா
- அப்யுதயா
- பாலதெகிலதல்லி
- தையவா பிருத்வி (கன்னட சாகித்ய அகடாமி விருது)
- சமுத்ர கீதகளு
- இங்கிலீஷ் வோர்ல்ட்
பிற
- சத்ய விமர்ஷய கெலவு தத்வகளு
- நன்ன ஜீவன திருஷ்டி
- ஜீவன பாட்டகளு
- கலா சித்தாந்தா
- இந்தியா & ஓர்ல்ட் கல்சர்
- கோகாக் க்ருதி சிந்தனா
மொழி பெயர்ப்புகள்
- இந்தி இலக்கியப் படைப்பாளி ராமதாரி சின்ஹ தினகரின் கவிதைகளை 'வாய்சஸ் ஆஃப் ஹிமாலயா' என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார்.
மேற்கோள்
- "Jnanpith Award". Ekavi. பார்த்த நாள் 2006-10-31.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.