வாழ்வியற் களஞ்சியம்
வாழ்வியற் களஞ்சியம் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் வாழ்வியல் தொடர்பான துறைகளுக்கென வெளியிடப்பட்ட கலைக்களஞ்சிம் ஆகும். இது பதினைந்து தொகுதிகளாக வெளிவந்துள்ளது. இதில் 15 000 விரிவான கட்டுரைகள் உள்ளன.
வரலாறு
வாழ்வியற் களஞ்சியம் வெளியிடும் பணி சென்னையில் 1983 ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. இதன் முதன்மைப் பதிப்பாசிரியர் அ. வெ. சுப்பிரமணியம் ஆவார்.[1]இரண்டாம் முதன்மைப் பதிப்பாசிரியராக நா. பாலுசாமி அவர்கள் செயல்பட்டார். இவர் காலத்தில் 15 தொகுதிகளின் பதிப்புப் பணி முடிவுற்றது.[2] மூன்றாம் முதன்மைப் பதிப்பாசிரியராக அ. மா. பரிமணம் அவர்கள் செயல்பட்டார். இவர் காலத்தில் 15 தொகுதிகளின் முழுப்பணியும் முடிவுற்றது.[3]
துறைகள்
- மொழியியல்
- கல்வியியல்
- மெய்ப்பொருளியல்
- வரலாறு
- தொல்லியல்
- கல்வெட்டியல்
- உளவியல்
- சமூகவியல்
- மேலாண்மையியல்
- பொருளியல்
- வணிகவியல்
- வங்கியல்
- மக்கள் தொகையியல்
- மானிடவியல்
- அரசியல்
- சட்டவியல்
- புவியியல்
- கவின்கலையியல்
- நாட்டுப்புறவியல்
- விளையாட்டியல்
மேற்கோள்கள்
- வாழ்வியற்களஞ்சியம், தொகுதி-1,தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1984.
- வாழ்வியற்களஞ்சியம், தொகுதி-2,தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்,1985.
- வாழ்வியற்களஞ்சியம், தொகுதி-15,தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.