யாழ்ப்பாணம் காமாட்சி சுந்தரத் தவில்காரர்

யாழ்ப்பாணம் காமாட்சி சுந்தரத் தவில்காரர் (1904 – 1951) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞராவார்.

பிறப்பும், இசைப் பயிற்சியும்

காமாட்சி சுந்தரம், யாழ்ப்பாணம் நகரில் நாகலிங்கம் பிள்ளை எனும் தவிற்கலைஞருக்கு மகனாக 1904 ஆம் ஆண்டு பிறந்தார். தனது அண்ணன் சின்னத்துரையிடம் தவில் கற்றுக்கொண்டார்.

இசை வாழ்க்கை

புகழ்பெற்ற நாதசுவரக் கலைஞர்களான அண்ணாசாமிப் பிள்ளை, சாவகச்சேரி அப்புலிங்கம் – சண்முகம், நல்லூர் முருகய்யா பிள்ளை, திருச்சேறை முத்து கிருஷ்ண பிள்ளை, டி. என். ராஜரத்தினம் பிள்ளை, திருவீழிமிழலை சகோதரர்கள் ஆகியோருக்கு இவர் தவில் வாசித்துள்ளார்.

இணுவில் சின்னத்தம்பிப் பிள்ளை, யாழ்ப்பாணம் வி. தெட்சணாமூர்த்தி ஆகியோர் காமாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணவர்கள் ஆவர்.

மறைவு

1951 ஆம் ஆண்டு தனது 47 ஆம் வயதில் காலமானார்.

உசாத்துணை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.