வண்ணனை மொழி நூலின் வழுவியல்
வண்ணனை மொழி நூலின் வழுவியல் ஆனது 1968ஆம் ஆண்டில் தேவநேயப் பாவாணரால் எழுதப்பட்டு வெளிவந்ததொரு நூலாகும்.
வண்ணனை மொழி நூல் பின்புலம்
மொழியியலானது மூவகைப்படும். அவையாவன[1]:
- மாந்தன் தோற்றத்தையும், பரவலையும் மொழியுடன் இணைத்து ஆராயும் வரலாற்று மொழியியல்.
- ஒரு மொழிக் குடும்பம் எனும் அடிப்படையில் ஒப்பிட்டு ஆராய்வதாகிய ஒப்பியன் மொழியியல்.
- ஒலி, உருபு ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்டு, ஒரு மொழியை மட்டும் விளக்குவதும், இலக்கணத்தின் பாற்பட்டதுமாகிய வண்ணனை மொழியியல்.
மொழியானது வரலாற்றுடன் ஒட்டி ஆராயப்படுதலே தகும் என்றும் பாவாணர் கூறுகின்றார்.
மேற்கோள்கள்
<references>
- வண்ணனை மொழி நூலின் வழுவியல், அறிமுகவுரை
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.