லூயிசு மார்ட்டின் மற்றும் மேரி செலின் குரின்
லூயிசு மார்ட்டின் மற்றும் மேரி செலின் குரின் (Louis Martin and Marie-Azélie Guérin) என்பவர்கள் கத்தோலிக்க புனிதர்களாவர். இவர்கள் புனித குழந்தை இயேசுவின் திரேசாவின் பெற்றோர்களாவர். இவர்களுக்கு புனிதர் பட்டம், 18 அக்டோபர் 2015 அன்று அளிக்கப்பட்டது.[1][2]
புனித லூயிஸ் மார்ட்டின் | |
---|---|
![]() | |
பிறப்பு | ஆகத்து 22, 1823 |
இறப்பு | 29 சூலை 1894 70) | (அகவை
ஏற்கும் சபை/சமயம் | உரோமன் கத்தோலிக்க திருச்சபை |
அருளாளர் பட்டம் | திருத்தந்தை 16-ம் பெனடிட்-ஆல் 19 அக்டோபர் 2008, புனித திரேசா பேராலயம், பிரான்சு |
புனிதர் பட்டம் | திருத்தந்தை பிரான்சிஸ்-ஆல் 18 அக்டோபர் 2015, புனித பீட்டர் சதுக்கம் |
திருவிழா | 12 சூலை |
பாதுகாவல் | குடும்பம், தந்தை |
புனித மேரி செலின் குரின் | |
---|---|
![]() | |
பிறப்பு | திசம்பர் 23, 1831 செயின்ட்-டெனிசு, பிரான்சு |
இறப்பு | 28 ஆகத்து 1877 45) அலசோன், பிரான்சு | (அகவை
ஏற்கும் சபை/சமயம் | உரோமன் கத்தோலிக்க திருச்சபை |
அருளாளர் பட்டம் | திருத்தந்தை 16-ம் பெனடிட்-ஆல் 19 அக்டோபர் 2008, புனித திரேசா பேராலயம், பிரான்சு |
புனிதர் பட்டம் | திருத்தந்தை பிரான்சிஸ்-ஆல் 18 அக்டோபர் 2015, புனித பீட்டர் சதுக்கம், வாட்டிகன் |
திருவிழா | 12 சூலை |
குடும்ப வாழ்க்கை
லூயிசு மார்ட்டின், சூலை 12, 1858-ல் மேரி செலின் குரினை(Marie-Azélie Guérin) மணந்தார். இவர்கள் ஒன்பது குழந்தைகளை பெற்றெடுத்தனர். அவர்களில் நால்வர் சிறுவயதிலேயே இறந்துவிட்டனர்.மீதமுள்ள ஐந்து குழந்தைகளும் பிற்காலத்தில் அருட்சகோதரிகளாக மாறினர். இந்த தம்பதியரின் கடைசி குழந்தையாக(ஒன்பதாவது) பிறந்தவர்தான் புனித குழந்தை இயேசுவின் திரேசாள்.[3] இவர்களின் குழந்தைகள்
- மேரி லூயிஸ் (22 பிப்ரவரி 1860 – 19 சனவரி 1940), அருட்சகோதரி, சகோதரி திருஇருதயத்தின் மேரி, லிசியே நகர கார்மல்சபை;
- மேரி பவுலின் (7 செப்டம்பர் 1861 – 28 சூலை 1951), அருட்சகோதரி, இயேசுவினுடைய ஆக்னஸ் அம்மா, லிசியே நகர கார்மல்சபை;
- மேரி லியோனி (3 சூன் 1863 – 16 சூன் 1941), அருட்சகோதரி, சகோதரி பிரான்கோஸி தெரஸ், Visitandine at Caen;
- மேரி கெலனி (3 அக்டோபர் 1864 – 22 பிப்ரவரி 1870);
- ஜோசப் லூயிஸ் (20 செப்டம்பர் 1866 – 14 பிப்ரவரி 1867);
- ஜோசப் ஜீன்-பேப்ஸ்ட் (19 டிசம்பர் 1867 – 24 ஆகஸ்ட் 1868);
- மேரி செலின் (28 ஏப்ரல் 1869 – 25 பிப்ரவரி 1959), அருட்சகோதரி, சகோதரி திருமுகத்தினுடைய ஜெனிவி, லிசியே நகர கார்மல்சபை;
- மேரி மெலனி தெரஸ் (16 ஆகஸ்ட் 1870 – 8 அக்டோபர் 1870);
- மேரி பிரான்கோஸி தெரஸ் (2 சனவரி 1873 – 30 செப்டம்பர் 1897), அருட்சகோதரி, அருட்சகோதரி குழந்தை இயேசுவின் திரேசா மற்றும் திருமுகத்தின் திரேசா, லிசியே நகர கார்மல்சபை, 1925-ல் புனிதர் பட்டம்.[4]
புனிதர்பட்டம்
லூயிசு மார்ட்டின் மற்றும் அவரது மனைவி செலின் வணக்கத்துக்குரியவராக 26 மார்ச் 1994 அன்று, திருத்தந்தை இரண்டாம் ஜாண்பாலால் அறிவிக்கப்பட்டது. இவர்களுக்கு முக்திபேறுபட்டம் 19 அக்டோபர் 2008 அன்று திருத்தந்தை 16-ம் பெனடிடால் அளிக்கப்பட்டது.
ஆதாரங்கள்
- http://ncronline.org/news/global/pope-francis-recognizes-miracle-needed-declare-french-couple-saints
- புனிதர் பட்டம் குறித்து வத்திக்கான் வானொலியில்
- "The Story of soul" by St,Therese of lisieux
- O'Riordan, Maureen. "Storm of Glory: St. Therese of Lisieux from 1897–2014". Saint Therese of Lisieux: A Gateway. பார்த்த நாள் 18 October 2015.