ரீட்டா (புனிதர்)

கேசியாவின் புனித ரீட்டா (Saint Rita of Cascia, பிறப்பு: மார்கரீட்டா லோட்டி, 1381 - மே 22, 1457) என்பவர் கிறித்தவ புனிதை ஆவார். இவர் 1900 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் நாள் புனிதையாக உரோமை நகரில் திருத்தந்தை 13 ஆம் லியோவால் அறிவிக்கப்பட்டார். இவர் திருமணமானவர். இவரது திருமண வாழ்க்கை 18 ஆண்டுகளில், அவர்களது கணவனை தவறான வாழ்க்கையிலிருந்து மீட்க முயற்சி செய்ததில் முடிவடைந்தது.

புனித ரீட்டா
அம்மா, விதவை, அருள் வடுவுற்றவர், மத அர்ப்பணம்
பிறப்பு1381
உம்பிரியா, இத்தாலி
இறப்புமே 22, 1457(1457-05-22)
உம்பிரியா, இத்தாலி
ஏற்கும் சபை/சமயம்கத்தோலிக்கம்
அக்லிபாயன்
அருளாளர் பட்டம்திருத்தந்தை எட்டாம் அர்பன்-ஆல் 1626
புனிதர் பட்டம்திருத்தந்தை 13 ஆம் லியோ-ஆல் மே 24, 1900, வாட்டிகன் நகரம், உரோமை
முக்கிய திருத்தலங்கள்கேசியா, இத்தாலி
திருவிழாமே 22
சித்தரிக்கப்படும் வகைநெற்றியில் காயம், உரோஜா, தேனீக்கள், திராட்சைக் கொடி
பாதுகாவல்தொலைந்த மற்றும் முடியாத காரணங்கள் , நோயாளிகள், காயங்கள், திருமணம் சார்ந்த பிரச்சனைகள், அதிகாரம், உரிமை, முதலியவற்றைத் தவறாகப் பயன்படுத்துதல், தாய்மார்கள்
சர்ச்சை(கள்)குடும்ப வன்முறை, குடிமரபுப்பகை, குடும்ப கௌரவம்

வாழ்க்கைக் குறிப்பு

ரீட்டா இத்தாலி நாட்டிலுள்ள கேசியா நகருக்கு அருகிலுள்ள ரோக்கபொரினா கிராமத்தில் கி.பி. 1381 இல் பிறந்தார். அவரது பெற்றோர் ஆண்டனியோ, அமடா லோட்டி ஆவர். தன் பெற்றோரின் விருப்பப்படி பவோலோ மன்சினி என்பவரை மணந்தார்.[1] தன் கணவன் மற்றும் தன் மகன்களின் மறைவுக்குப் பின் அகஸ்தீன் சபையில் இணைந்தார்.[2] இவர் 1457 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் நாள் இறந்தார்.[3]

உசாத்துணை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.