ரவுல் பிக்டே
ரவுல்-பியேர் பிக்டே (Raoul-Pierre Pictet, 4 ஏப்ரல் 1846 – 27 சூலை 1929) என்பவர் சுவிட்சர்லாந்து இயற்பியலாளர் ஆவார். இவரே முதன் முறையாக நைதரசனை வெற்றிகரமாகத் திரவமாக்கியவர்.
ராவுல்-பியேர் பிக்டே Raoul-Pierre Pictet | |
---|---|
![]() | |
பிறப்பு | ஏப்ரல் 4, 1846 ஜெனீவா |
இறப்பு | 27 சூலை 1929 83) பாரிஸ் | (அகவை
தேசியம் | சுவிட்சர்லாந்து |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | ஜெனீவா பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | திரவ நைதரன் |
விருதுகள் | டேவி விருது (1878) |
கையொப்பம் ![]() |
வாழ்க்கைச் சுருக்கம்
ஜெனீவாவில் பிறந்த பிக்டே ஜெனீவா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். இவரது ஆய்வுகள் பெரும்பாலும் குறைந்த வெப்பநிலைகளைப் பெறுதலிலும், வளிமங்களைத் திரவமாக்குவதிலும், திண்மமாக்குவதிலும் இருந்தன.[1]
1877 டிசம்பர் 22 இல், பாரிசில் உள்ள அறிவியல் கழகத்திற்கு ஜெனீவாவில் இருந்து பிக்டே அனுப்பியிருந்த ஒரு தந்தியில் பின்வருமாறு குறிக்கப்பட்டிருந்தது: சல்பூரசு மற்றும் கார்போனிக் காடிகளைப் பயன்படுத்தி 320 வளிமண்டல அழுத்தத்திலும், 140 பாகை குளிரிலும் இன்று ஆக்சிசன் திரவமாக்கப்பட்டது. இவ்வறிவிப்பு வெளியிடப்பட்ட அதே காலகட்டத்தில் பிரான்சைச் சேர்ந்த லூயி பால் காயில்டேட் என்பவர் முற்றிலும் வேறான முறையொன்றில் ஆக்சிசனைத் திரவமாக்கியிருந்தார்.
மேற்கோள்கள்
- Sloan, T. O'Connor (1920). Liquid Air and the Liquefaction of Gases. New York: Norman W. Henley. பக். 152–171. http://books.google.com/books?id=eLk3AAAAMAAJ&q=%22The+Life+of+Raoul+Pictet%22#search_anchor.