ரவா இட்லி
ரவா இட்லி அல்லது ரவை இட்லி (கன்னடம்:ರವೆ ಇಡ್ಲಿ) என்பது தென் இந்திய காலை உணவுகளில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த இட்லியானது வழக்கமான புழுங்கல் அரிசி, உளுந்து ஆகியவற்றுடன் கூடுதலாக ரவை அல்லது பாம்பே ரவா கொண்டு செய்யப்படுகிறது.
வரலாறு
இது கர்நாடகத்தின் சிறப்பு உணவுகளுள் ஒன்று ஆகும். பெங்களுரில் உள்ள MTR உணவகம் இதை அறிமுகப்படுத்தியதாக கூறுகிறது.[1] இரண்டாம் உலகப் போரின் பொழுது ஏற்பட்ட அரிசி தட்டுப்பாடு காரணமாக இது தயாரிக்கப்பட்டது.
கன்னட மொழியில் ரவை இட்லியை சேமோலினா- இட்லி என்று கூறுவார்கள். அது உடுப்பி உணவகங்களில் வழக்கமாக காணப்படும். ரவை இட்லியை சூடாக தேங்காய் சட்னியுடன் கொஞ்சம் நெய் ஊற்றி சாப்பிட்டால் ஒட்டுமொத்த சுவை கூடும்.
மேலும்
- கர்நாடகா சமையல்
- வேகவைத்த உணவுகள் பட்டியல்
- உடுப்பி சமையல்
சான்றுகள்
- Invention of rava idli by Mavalli Tiffin Rooms is mentioned in "Rava Idli". Webpage of Mavalli Tiffin Rooms. Mavalli Tiffin Rooms. பார்த்த நாள் 2012-05-06.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.