யான் சமீன்
யான் சமீன் (Jiang Zemin) சீனாவின் முக்கிய தலைவர்களின் ஒருவர். சீனப் பொதுவுடமைக் கட்சியின் மூன்றாம் தலைமுறைத் தலைவர். இவர் சீனப் பொதுவுடமைக் கட்சியின் செயலாளாராக 1989 இருந்து 2002 பணிபுரிந்தார். சீனாவின் சனாதிபதியாக 1993 இருந்து 2003 வரை பணியாற்றினார். சீனாவின் நடுவண் படைத்துறை ஆணையத்தின் தலைவராக 1989 இருந்து 2004 வரை பணியாற்றினார்.
யான் சமீன் 江泽民 | |
---|---|
![]() | |
சீனப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச்செயலாளர் | |
பதவியில் 24 சூன் 1989 – 15 நவம்பர் 2002 | |
துணை | Li Peng Zhu Rongji Li Ruihuan Hu Jintao |
முன்னவர் | Zhao Ziyang |
பின்வந்தவர் | Hu Jintao |
President of the People's Republic of China | |
பதவியில் 27 மார்ச்சு 1993 – 15 மார்ச்சு 2003 | |
Premier | Li Peng Zhu Rongji |
துணை குடியரசுத் தலைவர் | Rong Yiren Hu Jintao |
முன்னவர் | Yang Shangkun |
பின்வந்தவர் | Hu Jintao |
Chairman of the CPC Central Military Commission | |
பதவியில் 9 நவம்பர் 1989 – 19 செப்டம்பர் 2004 | |
முன்னவர் | Deng Xiaoping |
பின்வந்தவர் | Hu Jintao |
Chairman of the PRC Central Military Commission | |
பதவியில் 19 மார்ச்சு 1990 – 8 மார்ச்சு 2005 | |
முன்னவர் | Deng Xiaoping |
பின்வந்தவர் | Hu Jintao |
Member of the 13,14,15 th CPC Politburo Standing Committee | |
பதவியில் 24 சூன் 1989 – 15 நவம்பர் 2002 | |
General Secretary | Himself |
தேசிய மக்கள் பேராயத்தின் உறுப்பினர் | |
பதவியில் 25 மார்ச்சு 1988 – 5 மார்ச்சு 2008 | |
தொகுதி | Shanghai At-large |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 17 ஆகத்து 1926 Yangzhou, Jiangsu |
தேசியம் | சீனர் |
அரசியல் கட்சி | சீனப் பொதுவுடமைக் கட்சி |
வாழ்க்கை துணைவர்(கள்) | Wang Yeping |
படித்த கல்வி நிறுவனங்கள் | Shanghai Jiao Tong University |
தொழில் | மின் பொறியாளர் |
1989 டியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்களை அப்போதைய தலைவரான Zhao Ziyang இறுக்கமாக கையாளவில்லை என விலக்கப்பட்டர். அவருக்கு மாற்றாக யான் சமீன் தலமையை ஏற்றார். இவரது தலைமையின் கீழ் சீனாவில் பாரிய பொருளாதார சீர்திருத்தங்கள் நிகழ்ந்தன. ஹொங்கொங் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து சீனாவுக்கு சுமூகமாக கைமாறியது. மக்காவு போத்துக்கலிடம் இருந்து சீனாவுக்கு சுமூகமாக கைமாறியது.
முதலாளித்துவ கொள்கைகளை வெளிப்படையாக நடைமுறைப்படுத்தினார். இவர் சட்டதுக்கு ஏற்ப தனியார் சம்பாதித்த சொத்துக்களின் உரிமைகளை உறுதி செய்தார். மனித உரிமைகளைப் பாதுகாக்கப்படும் என்றும் அரசமைப்புச் சட்டத்தில் எழுதி வைத்தார். எனினும் நடைமுறையில் மனித உரிமைகள் தொடர்பாக பாரிய முன்னேற்றம் காணப்படவில்லை.