யமத்தா நோ ஒரொச்சி

யமத்தா நோ ஒரொச்சி ஜப்பானியத் தொன்மவியில் இடம்பெறும் ஒரு இராட்சத எண்தலை பாம்பு ஆகும். ஜப்பானிய மொழியில் இதை ヤマタノオロチ என்று அழைப்பர். இது, 八俣—の--大蛇 முன்று பகுதிகளாக பிரித்து நோக்கப்படல் வேண்டும். இது "யமத்தா நோ ஒரொச்சி" என வாசிக்கப் பட வேண்டும்.

八--ய --எட்டு
俣--மத்தா-பிரிவுகள்
の--நொ--உடைமையை குறிக்கும் விகுதி
大蛇-- ஒரொச்சி
大--ஒ--பெரிய
蛇--ரொச்சி-- பாம்பு

சுருக்கமாக இராட்சத எண்தலை பாம்பு எனலாம்.

இதை ஒரு டிராகன் விவரிக்கப்படுவது உண்டு. இந்த கொடிய விலங்கை சுசனோ என்ற கடவுள் கொன்றதாக பிரபல கதையாடல் ஒன்று தெரிவிக்கின்றது. இக்கதையாடல் மிக தத்ரூபமாக மேடையேற்றப்படுவது வழக்கம்.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.