மௌனி

மௌனி (இயற்பெயர் - மணி, சூலை 27, 1907 - சூலை 6, 1985) ஒரு புகழ் ஈட்டிய தமிழ் எழுத்தாளர். இவர் மணிக்கொடி இதழில் எழுதத் துவங்கி, கசடதபற இதழ் வரை கதைகள் எழுதியவர். கணிதத்தில் பட்டம் பெற்றிருந்த அவருக்கு இசையிலும் மெய்யியலிலும் ஆழ்ந்த ஈடுபாடு உண்டு.

மெளனி
பிறப்புசூலை 27, 1907
மாயவரம் அருகில்
இறப்புசூலை 6, 1985(1985-07-06) (அகவை 77)

கதாபாத்திரங்களின் அன்றாட உலகை விவரிப்பதை விடவும் அவர்களது மனவுலகின் அரிய தருணங்களை வெளிப்படுத்துவதே இவரது எழுத்து நடையின் சிறப்பு. இவர் 24 கதைகள் மட்டுமே எழுதியுள்ளார்.

வாழ்க்கைச் சுருக்கம்

1907 சூலை 27ஆம் நாள் தஞ்சை மாவட்டம் மாயவரத்திற்கு அருகிலுள்ள கிராமத்தில் பிறந்தார். அவருடைய தந்தையார் செம்மங்குடியில் வாழ்ந்து வந்தார். 1935 வரை கும்பகோணத்தில் படித்தார். கணிதத்தில் பட்டம் பெற்றார். திருமணத்திற்கு பிறகு 14 ஆண்டுகள் கும்பகோணத்தில் வசித்தார். பின்னர் தன் குடும்பச் சொத்து மற்றும் தொழிலைப் பராமரிக்க சிதம்பரம் வந்து இறுதிவரை அங்கேயே வாழ்ந்தார். மெளனிக்கு மொத்தம் ஐந்து குழந்தைகள். நான்கு மகன்களும் ஒரு மகளும். இரண்டு மகன்கள் இளம் வயதிலேயே விபத்தில் சிக்கி அகால மரணமடைந்தனர். ஒருவர் எம்.ஏ. படித்து மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் 2004இல் காலமானார். ஒரு மகன் அமெரிக்காவில் வசிக்கிறார். மகள், மெளனியின் வீட்டில் சிதம்பரத்தில் வாழ்ந்து வருகிறார். மெளனி 1985 சூலை 6ஆம் தேதி காலமானார்.

மெளனியின் மொத்த படைப்புகள் - 24 சிறுகதைகள், 2 கட்டுரைகள்

மெளனி படைப்புகள் முழுத் தொகுப்பு – காலச்சுவடு பதிப்பகம் (2010)

படைப்புகள்

சிறுகதைகள்இதழ்வருடம்
1.பிரபஞ்சகானம்மணிக்கொடி1936
2.ஏன்?மணிக்கொடி1936
3.காதல் சாலைமணிக்கொடி1936
4.குடும்பத்தேர்மணிக்கொடி1936
5.கொஞ்ச தூரம்மணிக்கொடி1936
6.சுந்தரிமணிக்கொடி1936
7.அழியாச்சுடர்மணிக்கொடி1937
8.மாறுதல்மணிக்கொடி1937
9.நினைவுச் சுழல்மணிக்கொடி1937
10.மாபெருங் காவியம்தினமணி மலர்1937
11.மிஸ்டேக்மணிக்கொடி1937
12.சிகிச்சைஹனுமான் மலர்1937
13.எங்கிருந்தோ வந்தான்தினமணி வருஷ மலர்1937
14.இந்நேரம்,இந்நேரம்மணிக்கொடி1937
15.மாறாட்டம்மணிக்கொடி1938
16.நினைவுச் சுவடுதேனி1948
17.மனக்கோலம்தேனி1948
18.சாவில் பிறந்த சிருஷ்டிசிவாஜி1954
19.குடை நிழல்சிவாஜி மலர்1959
20.பிரக்ஞை வெளியில்சரஸ்வதி1960
21.மனக்கோட்டைஎழுத்து1963
22.உறவு,பந்தம்,பாசம்குருசேத்திரம்1968
23.அத்துவான வெளிகுருசேத்திரம்1968
24.தவறுகசடதபற1971
கட்டுரைகள்இதழ்வருடம்
1.எனக்கு பெயர் வைத்தவர்பி.எஸ்.ராமையா மணிவிழா மலர்1965
2.செம்மங்குடி தன் ஊர் தேடல்ஆனந்த விகடன்1968
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.