மூவேந்தர் குடிப் பூ
சேர, சோழ, பாண்டியர் என்னும் தொகைச்சொல் மூவேந்தரைக் குறிக்கும். இவர்கள் தம் குடியின் அடையாளச் சின்னமாக வெவ்வேறு பூக்களை அணிந்தனர். இதனைக் குடிப் பூ என்றும் அடையாளப் பூ என்றும் சொல்லலாம்
- சேரர் - பனைமடலால் செய்த பூ
- சோழர் - ஆர் (ஆத்தி)
- பாண்டியர் - வேம்பு
சான்றுகள்
- தொல்காப்பியம் புறத்திணையில் வெட்சித்திணையின் துறைகளைக் கூறும்போது தொல்காப்பியர் மூவேந்தரின் குடிப்பூ பற்றிக் குறிப்பிடுகிறார். 'போந்தை வேம்பே ஆர் என வரூஉம் மா பெருந் தானையர் மலைந்த பூ' என்கிறார். [1]
- 'வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும் மலைந்த சென்னியர் அணிந்த வில்லர் கொற்ற வேந்தர்' என்று மூவேந்தரின் குடிப்பூக்கள் அடுக்கிக் காட்டப்பட்டுள்ளன. [2]
- புலவர் கோவூர் கிழார் நலங்கிள்ளிக்கும், நெடுங்கிள்ளிக்கும் அறிவுரை கூறும்போது 'நீங்கள் இருவரும் ஆர் (=ஆத்திப் பூ) சூடியவர்கள். பனைமரத்தினை வெண்தோடும், வேம்பும் அணிந்தவர் (முறையே சேரரும், பாண்டியரும்) அல்லர் என்று குறிப்பிடுகிறார். [3]
- பனங்குருத்து மாலைகளைத் தலையில் சூடிக்கொண்டனர். [4]
மேலும் காண்க
அடிக்குறிப்பு
- தொல்காப்பியம் புறத்திணையியல் நூற்பா 4-4
- புறநானூறு 338
- புறநானூறு 45
- மறங்கெழு போந்தை வெண்தோடு புனைந்து நிறம் பெயர் கண்ணி - பதிற்றுப்பத்து 51
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.