முள்ளூர்

சங்ககாலத்தில் முள்ளூர் அரசன் மலையமான் திருமுடிக்காரி.
பெண்ணையாற்றுப் படுகையிலுள்ள முள்ளூர் பொருநன் மலையமான் திருமுடிக்காரி. [1]
இவன் சிறந்த வேல் வீரன். [2]
முள்ளூர் மலையை ஆரியர் படை தாக்கியது. அந்தப் படை மலையனின் ஒரு வேலுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் ஓடியது [3]
முள்ளூர் மன்னன் ஆனிரை கவர்ந்துவந்தான்[4]
முள்ளூர் மாமலை “பொய்யா நாவின் கபிலன் பாடிய” சிறப்பு மிக்கது. பல போர்களில் வென்றி கண்ட வானவன் இம்மலைமீது படைநடத்திப் போரிட்டான். மலையமான் திருமுடிக்காரி அப்படையை முறியடித்து அந்த மலைமீது புலிக்கொடியைப் பொறித்துக்கொண்டான். [5]
முள்ளூர் மன்னன் மலையமான் திருமுடிக்காரி தேர்களை மிகுதியாக வழங்கினான். [6]
முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி வல்வில் ஓரியைக் கொன்று அவனது கொல்லிமலை நாட்டைச் சேரலர்களுக்கு அளித்தான்.[7]

அடிக்குறிப்பு

  1. மாறோக்கத்து நப்பசலையார் புறம் 126
  2. செவ்வேல் மலையன் முள்ளூர் - கபிலர் குறுந்தொகை 312
  3. நற்றிணை 170
  4. கபிலர் நற்றிணை 291
  5. மாறோக்கத்து நப்பசலையார் புறம் 174
  6. கபிலர் புறம் 123
  7. கல்லாடனார் அகம் 209
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.