மீனாட்சியம்மை குறம்

மதுரை மீனாட்சியம்மை குறம் [1] [2] என்னும் நூல் குமரகுருபரரால் படைக்கப்பட்டது. சொக்கலிங்கப் பெருமான் (சிவன்) மதுரையில் வீதி உலா வரும் போது காணும் மீனாட்சியம்மை அவர் மீது காதல் வயப்படுகிறார். அவரையே எண்ணியிருக்கும் கருத்திழந்த பொழுது பொதிய மலையில் வாழும் குறத்தி ஒருத்தி குறி [3] சொல்வதாக அமைந்துள்ளது. இது குறம் என்னும் சிற்றிலக்கிய வகை.

பாடல்களின் எண்ணிக்கை

காப்பு ஒன்றும், 51 பாடல்களும் இந்நூலில் அடங்கும்.

எடுத்தாண்ட யாப்புகள்

காப்பு அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தத்தில் உள்ளது.

51 செய்யுள்களில் எடுத்தாண்ட யாப்பிலக்கண வகைகளாவன:

  1. அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
  2. எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
  3. கொச்சகக் கலிப்பா
  4. சிந்து

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1990, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினேழாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 123.
  2. குமரகுருபரர். ஸ்ரீ குமரகுருபர சிவாமிகள் பிரபந்தங்கள். சென்னை, கேசரி அச்சகம்: திருப்பனந்தாள் மடம், காசிவாசி சுவாமிநாத சுவாமிகள், (உ. வே. சாமிநாதையர் குறிப்புரையுடன்) நூல் பதிப்பு 1939,. பக். 525.
  3. எதிர்காலம் பற்றிக் குறித்துச் சொல்லுதல்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.