மாபுராணம்

மாபுராணம் (Mapuranam) என்பது ஒரு பழந்தமிழ் இலக்கண நுால் ஆகும். இது இரண்டாம் தமிழ் சங்க காலத்தியதாக கருதப்படுகிறது.[1] [2] இது தொல்காப்பியத்திற்கு முற்பட்டது. பெரும் தொன்னுால் என்ற தமிழ் பெயருக்கு மாபுராணம் என்பது வடமொழியாகும். புராணம் என்று பெயரிட்டு செய்யுள் இலக்கணம் முதலாவதாக பல்வகை இலக்கணமும் கூறுதல் வடநுாலாருக்கு உடன்பாடு. இதனை வடநுால் அக்னி புராணத்தால் அறியலாம். இம்மாபுராணம் பெரும்பான்மை வெண்பாவும், சிறுபான்மை சூத்திரமுமாக இருந்ததாக உரைக்காரர் மேற்கோள் காட்டிய பகுதிகளால் அறியமுடிகிறது.

அகத்தியர் இயல், இசை, நாடகம் முதலிய எல்லாவற்றிக்கும் பரந்து விரிந்த இலக்கணம் அமைத்தார் என்றும் மாபுராணம் ஆசிரியர் முதலியோர் அவற்றுள் ஒவ்வொரு பகுதியை எடுத்து தொகை, வகை, விரியாள் கூறினாள் என்றும் கொள்ளலாம்.

மேற்கோள்கள்

  • தமிழ் மொழி வரலாறு, இரா.இராகவையங்கர்.
  1. P. T. Srinivasa-Iyengar, 1929, pp. 231-232
  2. Zvelebil 1973b, p. 47
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.