திருக்கண்ணன்
மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன் என்பவன் கபிலர் பாடிய முள்ளூர் மலையில் இருந்துகொண்டு ஆண்ட குறுநில மன்னன். சிறந்த கொடையாளி. வளவனின் கொடி இவனது கோட்டையில் பறந்தது. சோழநாடு அரசன் இல்லாமல் வாடிய காலத்தில் அங்கு ஆட்சி நிலைபெற உதவியவன். [1]
இவன் மலையமான் திருமுடிக்காரியின் மகன் எனவும், தன் தந்தை காரி உதவியதை போலவே, இத்திருக்கண்ணனும் சோழன் கிள்ளிவளவனின் ஆட்சியை மீட்க கிள்ளிவளவனுக்கு உதவினான் எனவும் கருதுகின்றனர்.
அடிக்குறிப்பு
- புறநானூறு 174
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.