மரியா தெரசா உரூசு

மரியா தெரசா உரூசு (María Teresa Ruiz) (பிறப்பு: 24 செப்டம்பர் 1946) ஒரு சிலி வானியலாளர் ஆவார். இவர் சிலி நாட்டுச் சரிநிகர் அறிவியல் புலங்களுக்கான தேசிய விருதைப் பெற்ற முதல் பெண்மணியாவார்.[1]

மரியா தெரசா உரூசு
María Teresa Ruiz
மரியா தெரசா உரூசு, 2015
பிறப்பு24 செப்டம்பர் 1946 (1946-09-24)
சாந்தியாகோ தெ சிலி
தேசியம்சிலியர்
அறியப்படுவதுகேலு 1 கண்டுபிடிப்பு

வாழ்க்கை

உரூசு 1946 இல் சாந்தியாகோ தெ சிலியில் பிறந்தார். இவர் சிலி பல்கலைக்கழகத்தில் வானியல் பயின்ற முதல் பெண்மணியாவார்.[1] இவர் பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் வானியற்பியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணியாவார். இவர் 1997 இல் சிலி நாட்டுச் சரிநிகர் அறிவியல் புலங்களுக்கான தேசிய விருதைப் பெற்ற முதல் பெண்மணி ஆனார்.[2] இவர் தியெசுத்ரே வான்காணகத்தில் முதுமுனைவர் ஆய்வுக்கும் தேர்வு செய்யப்பட்ட்டுள்ளார். உரூசு மெக்சிகோவில் அமைந்த யூனாம் வானியல் நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.

இவர் குகன்கீம் ஆய்வு நல்கையைப் பெறுவதற்கு முன்பு திரியெசுத்தே, மெக்சிகோ, நியூயார்க் நகரில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். இவர் கேலு -1 எனும் பழுப்புக் குறுமீனைக் கண்டுபிடித்தார்.[1]

இவர் 2016 மேவில் இருந்து சிலி அறிவியல் கல்விக்கழக உறுப்பினராகவும் சிலி பல்கலைக்கழகப் பேராசிரியராகவும் உள்ளார்.[3] இங்கு இவர் வானியலைக் கற்பிக்கிறார். இவர் வானியற்பியலுக்கான கெட்டா (CATA ) மைய உறுப்பினர் ஆவார்.[4]

தகைமைகளும் விருதுகளும்

  • அறிவியல் தலைமைக் கட்டில், 1996
  • சிலி பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதக்கம், 1996
  • அறிவியலுக்கான தேசிய விருது, 1997
  • சிலி பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதக்கம், 1998
  • அறிவியல் கல்விக்கழக ஆய்வுறுப்பினர், 1998 இல் இருந்து
  • இலாபார்க்கா தகைமை விருது, 2000
  • அறிவியல் மகளிருக்கான யுனெசுகோவின் உலோரியல் விருது, 2017.[5]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.