மயூரபதி பத்திரகாளி அம்மன் கோயில்

மயூரபதி பத்திரகாளி அம்மன் கோயில் இலங்கையின் கொழும்பு நகரில் அமைந்திருக்கும் அம்மன் கோயில் ஆகும்.

மயூரபதி பத்திரகாளி அம்மன் கோயில்
மயூரபதி பத்திரகாளி அம்மன் கோயில்
இலங்கை தேசப்படத்தில் மயூரபதி பத்திரகாளி அம்மன் கோயில்
ஆள்கூறுகள்:6°52′56.05″N 79°52′7.85″E
பெயர்
பெயர்:மயூரபதி
அமைவிடம்
நாடு:இலங்கை
மாகாணம்:மேல் மாகாணம்
மாவட்டம்:கொழும்பு
கோயில் தகவல்கள்
மூலவர்:அம்மன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை

வரலாறு

இக்கோயில் பரிபாலகர் பொன்.வல்லிபுரம் அப்போதைய பரிபாலன சபையினருடன் இணைந்து 1987 ஆம் ஆண்டில் அம்மனுக்கு அரச மரச்சாரலில் கோயில் அமைத்தார். தென்னிந்தியாவில் இருந்து சிற்பக் கலைஞர்களினார் செதுக்கிய பத்திரகாளி அம்பாளின் சிலையை வரவழைத்து, 1987 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் உத்தராட நட்சத்திர நாளில் ஆலயம் அமைத்து மருதானை கப்பித்தாவத்தை பாலசெல்வ விநாயகர் ஆலய குருக்கள் பா.சண்முகரத்தினக் குருக்களின் மேற்பார்வையில் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இன்று இவ்வாலயம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து அடியார்களுக்கு அருள் பாலித்து வருகிறது. இவ்வாலயத்தில் நடைபெறுகின்ற ஆடிப்பூர இலட்சார்ச்சனை, தேர் உற்சவம், இந்து சமுத்திரத் தீர்த்த உற்சவம், நவராத்திரி விழா ஆகியவை யாவும் சிறப்புக்காட்சியாகும்.

அது மட்டுமன்றிச் சமயத்தை வளர்க்கும் பணிகளான அறநெறிப் பாடசாலை, பண்ணிசை வகுப்பு, சமய சம்பந்தமான சொற்பொழிவுகள் என்பனவும் மிகவும் சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. மேலும் இவ்வாலயத்தில் அருங்கலை மண்டபம், தியான மண்டபம் மற்றும் சுப்பம்மாள் கல்யாண மண்டபம் கட்டப்பெற்றுள்ளது.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.