மத்சுயதேசம்

மத்சுயதேசம் குருதேசத்திற்கு நேர்மேற்கிலும், பாஹ்லிகதேசத்திற்கு தென்மேற்கிலும், சால்வதேசத்திற்குக் வடகிழக்கில் விபாசா நதியின் கிழக்கு பாகத்திலே பரவி இருந்த தேசம்.[1]

இருப்பிடம்

இந்த மத்சுயதேசமானது, முழுமையும் செம்மண்ணும்,மிருதுவான பூமியாக இருக்கும். இந்த தேசத்தின் இந்த பூமி அமைப்பால் கடலை, கோதுமை, மற்றும் மரங்களும் செழித்து இருக்கும்.[2]

பருவ நிலை

இந்த தேசத்தில் குளிர், பனி அதிகமாக இருக்காது, மழை மாத்திரம் சித்திரை, வைகாசி மாதம் முதல் புரட்டாசி மாதம் முடிய விடாமல் மாதம் மும்மாரி மழை பெய்துகொண்டே இருக்கும். பாஞ்சாலம், கோசலம், நிசதம் முதலான தேசங்களில் சித்திரை மாத ஆரம்பத்தில் தென்கிழக்கில் காற்று வீச மழை பெய்யும், கார்த்திகை மாதம் முதல் நல்ல வெயில் தோன்றும்.

மலை, காடு, மிருகங்கள்

இந்த தேசத்தின் வடக்குப் பக்கத்தில் துரந்தரம் என்ற பெரிய மலை உண்டு, மலையின் அடிவாரத்திலிருந்து சிறிய காடுகளும், அவைகளில் சில சிறு மிருகங்கள் அதிகமாக இருக்கும். இந்த தேசத்தின் கிழக்கில் சிறு, சிறு மலைகள் உள்ளது.

நதிகள்

இந்த மலைகள் சதத்ருநதியும், அமிர்தசரசுக்கு அருகில் உண்டாகி விபாசா நதியும் இணைந்து சால்வதேசத்தின் வடமேற்கு திசையில் ஓடி, சிந்து நதியுடன் இணைந்து வடுகிறது. .

விளைபொருள்

இந்த தேசத்தில் நெல், கோதுமை, கரும்பு முதலியனவும், தாம்பரம், பித்தளை முதலிய உலோகப் பொருள்களாலான வெகு அழகாய், நேர்த்தியாய் செய்யப்பட்ட பாத்திரங்களை அம்மக்கள் பயன்படுத்தினர்.

கருவி நூல்

சான்றடைவு

  1. "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras
  2. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 81 -
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.