மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம்

மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம் எனும் நூல் கலாநிதி கந்தையா குணராசாவினால் எழுதப்பட்ட ஒரு வரலாற்று ஆய்வு நூலாகும். இந்த நூல் மகாவம்சம் எனும் நூலில் காணப்படுகின்ற இலங்கையின் வரலாறு தொடர்பான தகவல்களை சுருக்கமாகவும், உண்மைகளையும் பொய்மைகளையும் வாசிப்போர் விளங்கிக்கொள்ளும் வகையில் விளக்கியும் ஒரு ஆய்வு நூலாக வெளியிடப்பட்டது. இந்த நூல் இலங்கை, யாழ்ப்பாணம், கமலா பதிப்பகம் ஊடாக 2003ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம்
நூல் பெயர்:மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம்
ஆசிரியர்(கள்):க. குணராசா
வகை:மகாவம்சம் சுருக்கம்
துறை:மகாவம்சம் விளக்கம்
காலம்:2003
இடம்:யாழ்ப்பாணம்
மொழி:தமிழ்
பக்கங்கள்:145
பதிப்பகர்:கமலா பதிப்பகம்
பதிப்பு:2003
ஆக்க அனுமதி:ஆசிரியருடையது
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.