போண்டா மணி
போண்டாமணி தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகராவார். நூற்றி எழுபத்தியைந்து திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.[1]
இவருடைய இயற்பெயர் கேதீஸ்வரன் என்பதாகும். இவருடன் உடன் பிறந்த 16 நபர்களில் 8 நபர்கள் இலங்கை இனக்கலவரத்தில் இறந்து விட்டார்கள்.[2]
வாழ்க்கை வரலாறு
எம்.மாரிமுத்து செட்டியார் - மகேஷ்வரி தம்பதியரின் மகனாக போண்டாமணி 15 செப்டம்பர் 1963ல் பிறந்தார். இவருடைய தாயகம் இலங்கையில் உள்ள மன்னார் பகுதியாகும்.[3] அங்கு மறுமலர்ச்சி விநாயகர் கலா மன்றம் என்ற பெயரில் மன்றமொன்றை தொடங்கி நண்பர்களோடு கலைநிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். தமிழ்நாட்டில் நடிகனாகும் வாய்ப்பு உள்ளதென இலங்கையிலிருந்து அகதியாக இராமேஷ்வரம் வந்து நடிகனார்.[4]
படங்கள்
- வேலாயுதம் (திரைப்படம்) (2011)
- சச்சின் (திரைப்படம்) (2005)
- வசீகரா (2003).
- பட்டு வண்ண ரோசாவாம்
- வாக்கப்பட்ட சீமை (2012)
- அஞ்சல் துறை (2013)
ஆதாரங்கள்
- http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=22092 ”என்னை பட்டினி போடாத எடப்பாடி மண்ணு!”
- மூக்கு பொடப்பா இருந்தா இப்படிதான்! - குமுதம் 23-2-2015 பக் 44
- http://geniusreporter.com/?p=2732 வாழ வைத்த தமிழகம் – நடிகர் போண்டா மணி வாழ்க்கை வரலாறு
- http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=10704 வடிவேலு - சிங்கமுத்து சமாதானம் : நடிகர் போண்டா மணி
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.