பொறையன் பெருந்தேவி

பொறையன் பெருந்தேவி என்பவள் அந்துவஞ்சேரல் இரும்பொறை என்னும் சேர மன்னனின் மனைவி. இவளது தந்தை பெயர் 'ஒருதந்தை'. பதிற்றுப்பத்து. ஏழாம்பத்தின் பாட்டுடைத் தலைவன் செல்வக் கடுங்கோ வாழியாதன் இவளது மகன்.[1] இவளது பெயர் தெரியவில்லை. கணவன் பொறையன். எனவே 'பொறையன் பெருந்தேவி' எனக் குறிப்பிடுகின்றனர். கோவலனைக் கொன்ற பாண்டியன் மனைவியைக் 'கோப்பெருந்தேவி' எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடுவதை நினைவுகூரலாம்.

அடிக்குறிப்பு

  1. பதிற்றுப்பத்து, பதிகம் 7
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.