பேரழிவு ஆயுதம்

பேரழிவு ஆயுதம் எனப்படுவது தொகையாக மனிதர்களை கொல்லக்கூடிய அல்லது மனித இருப்பிடங்களை சூழலை பெரும் அழிவுக்கு உட்படுத்துக்கூடிய ஆயுதத்தை குறிக்கின்றது. இந்த சொல் அணு, வேதி, உயிரி, கதிர்வீச்சு ஆகிய வகைப்பட்ட ஆயுத வகைகளைச் சுட்டுகிறது. பேரழிவு ஆயுதங்களுக்கு எடுத்துக்காட்டாக ஐக்கிய அமெரிக்காவினால் 1945 ஆம் ஆண்டு இரோசிமா, நாகசாகி நகரங்கள் மீது போடப்பட்ட அணுக்குண்டுகள் விளங்குகின்றன.

2003 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்கா இராக் பேரழிவு ஆயுதங்களை வைத்திருப்பதாக குற்றம் சாட்டியே போர் தொடுத்தது. இருப்பினும் 2008 நடுப்பகுதி வரை எந்த வகை பேரழிவு ஆயுதங்களும் அங்கு கண்டெடுக்கப்படவில்லை.

இவற்றையும் பாக்க

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.