பெருங்கண்ணனார்
பெருங்கண்ணனார் சங்ககாலப் புலவர்.
இவரது பாடல்கள் இரண்டு உள்ளன.
அவை: குறுந்தொகை 289, 310.
பாடல் சொல்லும் செய்தி

"மழை மான்றுபட்டன்று"
அவர் திறமா? தந்திறமா?
- மழை மான்றது(மழை பொழிய வானம் இருண்டுவருகிறது).
- அவர் சொன்ன இந்தப் பருவத்தில் அவரே வரவில்லையே என்று நான் கவலைப்படவில்லை.
- அவரைப் பேணி வளர்த்த பெருமக்கள் தாம் நன்கு வளர்க்காமைக்காக வருந்துகிறார்களே! அந்த ஊர்ப் பெருமக்களுக்காகத்தான் நான் கவலைப்படுகின்றேன்.
- அவர்திறத்துக்காகக் கவலைப்படவில்லை. பெருமக்கள்தம் திறத்துக்காக் கவலைப்படுகிறேன்.
- இவ்வாறு தலைவி தோழியிடம் கூறுகிறாள்.
- குறுந்தொகை 289
இன்னும் உளனே தோழி
- திருமணத்துக்குக் காலம் தாழ்கிறது. கிழத்தி நோழியிடம் சொல்கிறாள்.
- மாலை வருகிறது. புள்ளும் புலம்புகின்றன. பூவும் கூம்புகிறது. கானலும் புலம்புகிறது. வானமும் நம்மைப் போல் மம்மர்(மயக்கம்) கொண்டு இருள்கிறது. இன்னும் இருக்கிறேனே! இந்த நிலையை ஞாழல் பூக்கும் என் துறைவனுக்கு யாராவது சொல்லக்கூடாதா?
- குறுந்தொகை 310
ஓமை நிழல்
- நெஞ்சே! இவளைப் பிரிந்து கானம் செல்லும் வல்லமை உனக்கு இருக்கிறதா? அங்கே அகன்ற அருவி இருக்கும். நீர் இருக்காது. நிழல் இருக்கும். அது களிறு தன் பிடிக்கு ஒடித்துத் தந்த ஓமை மர நிழலாகத்தான் இருக்கும்.
- இவ்வாறு அவன் தனக்குத்தானே சொல்லிக்கொண்டு அவளைப் பிரிந்து செல்வதைக் கைவிடுகிறான்.
- நற்றிணை 137
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.