பூழிநாடு (சேர நாடு)
பூழியர் என்பவர் சங்ககால இடையர் குல மக்களில் ஓர் பிரிவு ஆவர்.
பூழியர் செம்மறியாடுகளையும், வெள்ளாடுகளையும் மேய்த்துவந்தனர்.[1]
அத்துடன் யானைகளைப் பழக்கும் தொழிலையும் செய்துவந்தனர். [2]
பூழி என்னும் சொல் புழுதியைக் குறிக்கும்.[3]
பூழில் என்னும் சொல் கமழும் மணத்தைக் குறிக்கும் [4] இதனால் கொங்குநாடு என்பது மணம் மிக்க நாடு என்னும் பொருளைத் தரும்.
பூழிநாட்டுச் செருப்புமலைப் பாதையில் வயிரக்கற்கள் கிடைக்கும் [5]
பல்யானைச் செல்கெழு குட்டுவன், [6] களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் [7] செல்வக் கடுங்கோ வாழியாதன் [8] பெருஞ்சேரல் இரும்பொறை [9], இளஞ்சேரல் இரும்பொறை [10] ஆகியோர் பூழிநாட்டைக் கைப்பற்றி ஆண்ட சேரமன்னர்கள் எனத் தெரியவருகின்றனர்.
பூழியர்கோ, பூழியர் மெய்ம்மறை என இவர்கள் குறிப்பிடப்படுகின்றனர்.
முத்தொள்ளாயிரம் என்னும் நூல் சேரமன்னனைப் பூழியன் என்றே குறிப்பிடுகிறது. [11]
பாண்டியன் நெடுமாறனை குறிக்க பாண்டிக்கோவை எனும் நூல் பூழியர் கோன் என சுட்டுகிறது [12]
அடிக்குறிப்பு
- பூழியர் துரு என்னும் செம்மறி ஆடுகள் மேய்த்தனர் - நற்றிணை 192
பூழியர் வெள்ளாடு மேய்த்தனர் - குறுந்தொகை 163 - அகம் 6
- விசயம் கொழித்த பூழி - மலைபடுகடாம் 444
விதையர் கொன்ற முதையல் பூழி - நற்றிணை 121
வாரணம் முதைசுவல் கிளைத்த பூழி - நற்றிணை 389
யானை … உதைத்த பூழி - அகம் 63
எலி … முரம்பில் சிதைத்த பூழி - அகம் 133
ஏர் இடம்படுத்த இறு மறுப் பூழி - அகம் 194
பெயல் ஈரத்துப் பூழி மயங்க - புறம் 120
கேழல் உழுத பூழி - புறம் 168
பூழி பூத்த புழல்கால் ஆம்பி - சிறுபாணாற்றுப்படை 134
உப்பு விற்போர் பூழிய சேண்புலம் சென்றனர் - அகம் 390 - பதிற்றுப்பத்து 87-2, ஐங்குறுநூறு 212
- கதிர்மணி பெறூஉம் - பதிற்றுப்பத்து 21-23
- பதிற்றுப்பத்து 21
- பதிற்றுப்பத்து பதிகம் 4
- புறம் 387-28
- பதிற்றுப்பத்து 73-13
- பதிற்றுப்பத்து 84, 90
- பூழியர்கோ – முத்தொள்ளாயிரம் 70, பூழியன் முத்தொள்ளாயிரம் 70
- பாண்டிக் கோவை 116, 126