பூமிபுத்ரா
ஒரு நாட்டிலோ அல்லது ஓர் இடத்திலோ தோன்றிய பூர்வக் குடியினரை பூமிபுத்திரா என அழைக்கலாம். இந்தச் சொல் மலேசிய நாட்டில் தோன்றிய பூர்வக் குடியினரைச் சுட்ட பயன்படுத்தப்பட்டு வருகின்றது.[1] தீபகற்ப மலேசியாவிலும், கிழக்கு மலேசியாவிலும் தோன்றிய பூர்வக் குடியினர், மற்றும் மலாய்க்காரர்களைப் பூமிபுத்திரா என்று அழைக்கின்றனர். இச்சொல் சமஸ்கிருத மொழியில் இருந்து தோன்றியது. (பூமி=உலகம்/மண், புத்திரா=மகன்). அதாவது மண்ணின் மைந்தர்கள் என பொருள் கொள்ளலாம்.
Bumiputra என்பது ஒரு சமஸ்கிருதச் சொல்லாக இருந்தாலும், மலாய் மொழியில் இப்போதைக்கு ஒரு வழக்குச் சொல்லாகிவிட்டது. அந்தச் சொல்லை 'பூமிபுத்ரா' என்றுதான் மலேசியாவில் அழைக்கிறார்கள். 1969 மே மாதம் 13ஆம் தேதி மலேசியாவில் ஓர் இனக்கலவரம் நடைபெற்றது. அதை மே 13 கலவரம் என்று அழைக்கிறார்கள்.[2] பொதுவாக, மலாய்க்காரர்களுக்கும் சீனர்களுக்கும் இடையே நிலவிய பொருளாதாரப் பாகுபாடுகளே அந்தக் கலவரத்திற்கு மூல காரணம் என்று கருதப்படுகிறது.
மேற்கோள்கள்
- Bumiputra is a Malaysian term to describe Malay race and the indigenous peoples of Southeast Asia in Malaysia.
- On May 13th 1969, simmering tension between the Malays and the Chinese burst on to the streets.
- Malaysian Indian Community: Victim of ‘Bumiputera’ Policy.
- Malaysia is probably the only country in the world with racial discrimination explicitly written into its constitution.