புராணம் பாடிய தென்காசிப் பாண்டியர்

முகம்மதியர் படையெடுத்து மதுரையை அழித்தபோது அங்கிருந்த பாண்டியர் பல கிளையினராகப் பிரிந்து தெற்கு நோக்கி நகர்ந்து கொற்கை, கருவை எனப்படும் கரிவலம்வந்த நல்லூர், தென்காசி முதலான இடங்களில் இருந்துகொண்டு சிற்சில ஊர்களை ஆண்டுவந்தனர். இவர்களைப் பொது வகையால் தென்காசிப் பாண்டியர் எனக் குறிப்பிடுவது வழக்கம். [1] இவர்களில் மூன்று பாண்டியர் சிறந்த தமிழ்ப் புலவர்களாகவும் விளங்கினர். இவர்களால் பாடப்பட்ட நூல்கள் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத் தக்கவை. [2]

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.