புதுவை இரத்தினதுரை

புதுவை இரத்தினதுரை (பிறப்பு: டிசம்பர் 3, 1948) ஒரு கவிஞர், சிற்பக்கலைஞர். தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுத் துறையில் முக்கிய பங்காற்றியவர். விடுதலைப் போராட்டத்துக்கு தனது கவிதைகளால் உரமூட்டியவர். புரட்சிப் பாக்களை எழுதி இளைஞர்களை எழுச்சி கொள்ளச் செய்தவர்.

புதுவை இரத்தினதுரை
பிறப்பு3 திசம்பர் 1948 (1948-12-03)
புத்தூர், யாழ்ப்பாண மாவட்டம்
அறியப்படுவதுகவிஞர், சிற்பக்கலைஞர்

வாழ்க்கைக் குறிப்பு

இவர் யாழ்ப்பாண மாவட்டம் புத்தூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

கலையுலகில்

இவர் தனது 14வது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கி விட்டார். இவர் வியாசன், மாலிகா என்ற புனைபெயர்களிலும் பல கவிதைகள் எழுதியுள்ளார். இவர் எழுதிய "இந்த மண் எங்களின் சொந்த மண்" பலரது வரவேற்பையும் பெற்ற உணர்வுப்பூர்வமான பாடல்.

வெளிவந்த கவிதைத் தொகுப்புகள்

  • வானம் சிவக்கிறது (1970)
  • ஒரு சோழனின் காதற் கடிதம்
  • நினைவழியா நாட்கள்
  • இரத்த புஷ்பங்கள்(1980)
  • உலைக்களம்
  • பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும்

வெளிவந்த ஒலிநாடக்கள்

  • களத்தில் மலர்ந்தவை (01.02.1989)

இவர் எழுதிய பாடல்களில் சில

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.