பிந்நாக்கீசர்
இவருக்கு இரட்டை நாக்கு, அதாவது பிளவு பட்ட நாக்கை உடையவர் இதனால் பிந்நாக்கர் என அழைக்கப்பட்டார். இடையர் குலத்தில் பிறந்த இவர் சிறந்த தமிழ்ப் புலமை பெற்றவர் என்றும், கர்நாடகத்தில் இருந்தவர் என்றும் போகர் சொல்கிறார். பாம்பாட்டிச் சித்தருக்கு சீடராக இருந்த இவருக்கு, மச்சமுனி சீடராக இருந்ததாக சொல்லப் படுகிறது.
நூல்கள்
- மெய்ஞானம்
- ஞானப்பால்
- முப்பூச் சுண்ணச் செயநீர்
சமாதி
இவர் கேரளத்திலுள்ள நங்குனாசேரி என்னுமிடத்தில் சமாதியடைந்ததாக சொல்லப்படுகிறது.
மூலம்
- சித்தர்கள் வாழ்க்கை, பி.என்.பரசுராமன், விகடன் பிரசுரம்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.