புணர்ச்சி விகாரம்

மொழியில் இரண்டு சொற்கள் ஒன்று சேர்தலைப் புணர்ச்சி என்கின்றனர். நிலைமொழி, வருமொழி எனப் புணரும் சொற்களுக்குப் பெயர் சூட்டியுள்ளனர். இவை புணரும்போது எந்த வகையான மாற்றமும் இன்றி இணையுமானால் அதனை இயல்பு அல்லது இயல்புப் புணர்ச்சி என்கின்றனர்.[1] முதலில் நிற்கும் நிலைமொழியிலோ, இறுதியில் அதனோடு வந்து சேரும் வருமொழியிலோ மாற்றம் நிகழ்ந்தால் அதனை விகாரப் புணர்ச்சி என்றோ, புணர்ச்சி விகாரம் என்றோ கூறுகின்றனர். இது இருவகை மொழியிலும் மொழியின் முதலிலோ, இடையிலோ, கடையிலோ நிகழும்.[2]

விகாரம் என்பது இயல்பு மாற்றம்.

எடுத்துக்காட்டுகள்

தோன்றல்பூ கொடிபூங்கொடிவருமொழி முதலில் மெய் தோன்றிற்று
திரிதல்அல் திணைஅஃறிணைவருமொழி முதலிலும், நிலைமொழி ஈற்றிலும் உள்ள மெய்கள் திரிந்தன
கெடுதல்நிலம் வலயம்நில வலயம்நிலைமொழி ஈற்றிலுள்ள [ம்] கெட்டது
திரிதலும், கெடுதலும்ஆறு பத்துஅறுபது'ஆறு' என்னும் நிலைமொழியில் உள்ள முதலெழுத்தின் நீட்சிதெ திரிபும், 'பத்து' என்னும் வருமொழியில் உள்ள [த்] என்னும் இடையொற்றுக் கேடும் நிகழ்ந்துள்ளன
தோன்றல், திரிதல், கெடுதல் மூன்றும்பனை காய்பனங்காய்நிலைமொழி 'பனை' என்பதில் உள்ள [ஐ] கெட்டது. 'அம்' என்னும் சாரியை தோன்றிற்று. 'அம்' சாரியை வருமொழிக்கு ஏற்ப 'அங்' எனக் கெட்டது.
மொழியின் மூவிடத்தும் கெடல்ஒன்பது பத்துதொண்ணூறுநிலைமொழியும், வருமொழியும், முதல், இடை, கடை என்னும் மூவிடத்தும் கெட்டன.[3]

உயிர் முன் உயிர் (உயிரோடு உயிர்)

உயிர் முன் உயிர் வரின் அங்கு நிலைமொழியும் வருமொழியும் இணையாது. உயிரும் மெய்யும் இணைவதே தமிழ் இலக்கண மரபு. ஆகையால் அதனைத் தமிழ்மரபுக்கு ஏற்றபடி மாற்றும் வகையில் வ்,ய் __ஆகிய மெய் எழுத்துகளில் ஏதேனும் ஒன்று அத்தகு சொற்களுக்கு இடையில் தோன்றும். இத்தகு முறைக்கு உடம்படுமெய் என்று பெயர்.

அ முதல் ஊ வரை

நிலைமொழிவருமொழி
வருமொழி
வருமொழி
வருமொழி
வருமொழி
வருமொழி
தீ + அவர் _தீயவர் -அளவு + அறிந்து _அளவறிந்து-----
ஆ+அடு=ஆவடு துறைதே+ ஆரம் _தேவாரம்மா+இலை=மாவிலை [4]
மா+இரு=மாயிரு ஞாலம் [5]
ஆ+இரு=ஆயிரு திணை [6]
--
மொழி+அறிவு=மொழியறிவுமொழி+ஆக்கம்=மொழியாக்கம்மொழி+இயல்=மொழியியல்மொழி+ஈறு=மொழியீறுவெளி+உலகம்=வெளியுலகம்வெளி+ஊர்=வெளியூர்
திரு+அருள்=திருவருள்திரு+ஆரூர்=திருவாரூர்திரு+இடம்=திருவிடம்திரு+உள்ளம்=திருவுள்ளம்கரு+ஊர்=கருவூர்
(கரு=மேன்மையானது, உயர்ந்தது)
பூ+அழகி=பூவழகிபூ+ஆரம்=பூவாரம்பூ+இதழ்=பூவிதழ்பூ+உலகம்=பூவுலகம்
சே+அடி=சேயடி
சே+அடி=சேவடி
வாழை+அடி=வாழையடிஔவை+ஆர்=ஔவையார்வாழை+இலை=வாழையிலைகடை+ஈறு=கடையீறுதிரை+உலகம்=திரையுலகம்உறை+ஊர்=உறையூர்
(ஔ)

எ முதல் ஔ வரை

நிலைமொழிவருமொழி
வருமொழி
வருமொழி
வருமொழி
வருமொழி
வருமொழி
------
திரு+ஓடு=திருவோடு
பூ+எல்லாம்=பூவெல்லாம்
வினை+எச்சம்=வினையெச்சம்கடை+ஏழு=கடையேழுபனை+ஓலை=பனையோலை
(ஔ)

வருமொழியின் முதலெழுத்து வல்லினம்

நிலைமொழி ஈறு (கடையெழுத்து)வருமொழி முதலெழுத்து க்வருமொழி முதலெழுத்து ச்வருமொழி முதலெழுத்து த்வருமொழி முதலெழுத்து ப்
பூப்பெயர் புணர்ச்சிபூ+கொடி=பூங்கொடி
பூ+கொடி=பூக்கொடி
பூ+செடி=பூஞ்செடி
பூ+செடி=பூச்செடி
பூ+தொட்டி=பூந்தொட்டி
பூ+தொட்டி=பூத்தொட்டி
பூ+பந்தல்=பூம்பந்தல்
பூ+பந்தல்=பூப்பந்தல்
ஞ் உரிஞ் [7]உரிஞு கொற்றா [8]
உரிஞுக் கொற்றன் [9]
உரிஞு சாத்தா
உரிஞுச் சாத்தன்
உரிஞு தத்தா
உரிஞுத் தத்தன்
உரிஞு பாணா
உரிஞுப் பாணன்
ண்மண்+கலம்=மட்கலம்கண்+செவி=கட்செவிமண்+துகள்=மட்துகள்மண்+பாண்டம்=மட்பாண்டம்
ந்
ம்உம்+கள்=உங்கள்
செம்மை+கல்=செங்கல்
குற்றம்+சாட்டு=குற்றச்சாட்டு
குற்றம்+சாட்டு=குற்றஞ்சாட்டு
செய்யும்+செயல்=செய்யுஞ்செயல்
செம்மை+தமிழ்=செந்தமிழ்செம்மை+பணி=செம்பணி
நிலம்+புலம்=நிலபுலம்
ய்
ர்
ல்நால்+காலி=நாற்காலி
நல்+கொடை=நன்கொடை
கல்+சிலை=கற்சிலை
வல்+சொல்=வன்சொல்
பல்+துளி=பஃறுளி
அல்+திணை=அஃறிணை
பல்+தோற்றம்=பன்தோற்றம்
வில்+படை=விற்படை
மெல்+பொருள்=மென்பொருள்
வ்
ழ்
ள்நாள்+காட்டி=நாட்காட்டி
வெள்+குடை=வெண்குடை
கோள்+சொல்=கோட்சொல்
வெள்+சிறகு=வெண்சிறகு
நாள்+தோறும்=நாட்தோறும்
வெள்+தாமரை=வெண்தாமரை
கள்+பானை=கட்பானை
வெள்+படை=வெண்படை
ன்முன்+காலம்=முற்காலம்முன்+செல்=முற்செல்பொன்+தொடி=பொற்றொடிமுன்+பகல்=முற்பகல்

வருமொழியின் முதலெழுத்து மெல்லினம்

நிலைமொழி ஈறு (கடையெழுத்து)வருமொழி முதலெழுத்து ஞ்வருமொழி முதலெழுத்து ந்வருமொழி முதலெழுத்து ம்
ஞ்
ண்விண்+ஞானம்=விஞ்ஞானம்
ந்
ம்செம்மை+ஞாயிறு=செஞ்ஞாயிறுசெம்மை+நிலம்=செந்நிலம்செம்மை+மண்=செம்மண்
ய்
ர்
ல்பல்+நிலை=பன்னிலைநல்+மை=நன்மை
பல்+மடங்கு=பன்மடங்கு
வ்
ழ்
ள்வெள்+நிலா=வெண்ணிலா
எள்+நெய்=எண்ணெய்
வெள்+மை=வெண்மை
ஆள்+மை=ஆண்மை
பெள்+மை=பெண்மை
நாள்+மலர்=நாண்மலர்
ன்முன்+நாள்=முன்னாள்

வருமொழியின் முதலெழுத்து இடையினம்

நிலைமொழி ஈறு (கடையெழுத்து)வருமொழி முதலெழுத்து ய்வருமொழி முதலெழுத்து வ்
ஞ்
ண்
ந்
ம்செம்மை+வாழை=செவ்வாழை
நிலம்+வலயம்=நிலவலயம்
ய்
ர்
ல்
வ்
ழ்
ள்
ன்

வேறுபாடு

புணர்ச்சி விகாரம்செய்யுள் விகாரம்
புணரும் நிலைமொழியிலும், வருமொழியிலும், தொடர்மொழியிலும் வரும்தனிமொழியிலும் வரும்
உலக வழக்கிலும், செய்யுள் வழக்கிலும் வரும்செய்யுளில் மட்டும் வரும்

அடிக்குறிப்பு

  1. விகாரம் அனைத்தும் மேவலது இயல்பே (நன்னூல் 153)
  2. தோன்றல் திரிதல் கெடுதல் விகாரம்
    மூன்றும் மொழி மூவிடத்தும் ஆகும் (நன்னூல் 154)
  3. இந்த விதியை மொழியியலார் ஏற்றுக்கொள்வதில்லை
  4. மா -பெயர்ச்சொல்
  5. மா - உரிச்சொல்
  6. ஆ - சுட்டு
  7. பெயர்ச்சொல் நிலையில் தோல் என்றும் வினைச்சொல் நிலையில் தோல் உரிதலையும் உணர்த்தும்
  8. ஏவல் வினை
  9. பெயர்ச்சொல்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.