பால்ராஜ்

பிரிகேடியர் பால்ராஜ் (நவம்பர் 27, 1965- மே 20, 2008, இயற்பெயர்: பாலசேகரம் கந்தையா, கொக்குத்தொடுவாய், முல்லைத்தீவு) தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு முதுநிலை போர் முனைத் தளபதியாக விளங்கியவர். ஈழப் போர்களின் பல போர்க்களங்களை வழிநடத்தியவர். 1983 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார். 1991 ஆம் ஆண்டு தொடக்கம் 1993 ஆம் ஆண்டு வரையும் பின்னர் 1995 ஆம் ஆண்டு தொடக்கம் 1997 ஆம் ஆண்டு வரையும் விடுதலைப் புலிகளின் முதலாவது மரபுவழிப் படையணியான சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் முதலாவது கட்டளைத் தளபதியாக அப்படையணியை வழிநடத்தியவர். வரலாற்றுச் சிறப்புமிக்க 2000 ஆம் ஆண்டு ஆனையிறவுச் சமரில் முக்கிய பங்காற்றினார்.

பாலசேகரம் கந்தையா
படிமம்:Balraj.jpg
பிறப்புநவம்பர் 27, 1965(1965-11-27)
கொக்குத்தொடுவாய்,  தமிழீழம்
இறப்புமே 20, 2008(2008-05-20) (அகவை 42)
முல்லைத்தீவு, தமிழீழம்
தேசியம்ஈழத்தமிழர்
மற்ற பெயர்கள்பால்ராஜ், லீமா
இனம்தமிழ்
பணிதமிழ்ப் போராளி
அறியப்படுவதுமரபுப்போர் முறை
ஆனையிறவுத் தாக்குதல்
சமயம்இந்து
வாழ்க்கைத்
துணை
வரதா (இறந்துவிட்டார்)

அமைதிப் பேச்சுக்களின் போது 2003 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பால்ராஜூக்கு இருதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 2008]] ஆண்டின் தொடக்கத்தில் 3 மாதங்கள் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். [[மே 20, 2008 இல் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் பால்ராஜ் மாரடைப்பால் சாவடைந்தார்[1].

மேற்கோள்கள்

  1. புலிகளின் மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் மாரடைப்பினால் காலமானார் (புதினம்)

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.