பாலைக் கௌதமனார்
பாலைக் கௌதமனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடியனவாக 11 பாடல்கள் சங்கநூல்களில் காணப்படுகின்றன. பதிற்றுப்பத்து என்னும் தொகுப்பு நூலில் மூன்றாம் பத்தாக அமைந்துள்ள 10 பாடல்களும், புறநானூற்றில் 366 எண்ணுள்ள பாடலும் இவரால் பாடப்பட்டவை.
பாலை என்பது இக்காலத்தில் கேரள மாநிலத்தில் பாலக்காடு என்னும் பெயருடன் விளங்கும் ஊரைக் குறிக்கும். கௌதமன் என்னும் பெயர் வடமொழித் தொடர்புடையதாகக் காணப்படுகிறது. புலவர் அந்தணர்.[1]. இமயவரம்பன் தம்பி பல்யானைச்செல்கெழு குட்டுவன் மீது இவர் பாடிய 10 பாடல்கள் பதிற்றுப்பத்தில் உள்ளன. தருமபுத்திரன்மீது இவர் பாடிய பாடல் புறநானூற்றில் உள்ளது.
அடிக்குறிப்பு
- பாடிப் பெற்ற பரிசில்:'நீர் வேண்டியது கொண்மின்' என, 'யானும் என் பார்ப்பனியும் சுவர்க்கம் புகல் வேண்டும்' என, பார்ப்பாரிற் பெரியோரைக் கேட்டு, ஒன்பது பெரு வேள்வி வேட்பிக்க, பத்தாம் பெரு வேள்வியில் பார்ப்பானையும் பார்ப்பனியையும் காணாராயினார் (பதிற்றுப்பத்து பதிகம் 3)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.